Tuesday, January 30, 2007

தளபதி மீண்டும்!!!!



ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்திக்கி கே டிவில தளபதி பார்த்தேன்!!!
என்ன நல்ல படம்!! ஒரு ஒரு காட்சியும் ரசிச்சு எடுத்து இருப்பார் மணிரத்னம்!!!
ரஜினியொட நடிப்பாகட்டும், மம்முட்டியொட நடிப்பாகட்டும், அரவிந்த சுவாமி ஆகட்டும் எல்லாரும் நல்லா நடிச்சு இருப்பாங்க!!!

தனியா காமெடி டிராக் எதுவுமே இல்லேனாலும் போர் அடிக்காத படம்...
ரஜினியோட அறிமுகமாகட்டும், மம்முட்டியோட அறிமுகமாகட்டும் எல்லாம் சூப்பர்...
ரஜினி அமரிஷ் பூரிகிட்ட தனக்கு தேவராஜ் தான் முக்கியம்னு சொல்லும் போதும்...அதுக்கு மம்முட்டி வந்து ரஜினி கிட்ட என்கிட்ட யாராவது வந்து "சூர்யா விட்டுடு நான் உன்ன பெரிய ஆளாக்கி காட்டரேன்னு சொல்லி இருந்தா நான் போயிருபேனோ என்னவோனு சொல்லும் போதும் சரி ரெண்டு பேரும் நல்லா நடிச்சு இருப்பாங்க.

அதே மாதிரி மம்முட்டி ரஜினிக்காக போய் பெண் கேட்கும் போதும்.. அது மறுக்க படும் போது மம்முட்டி அதுக்காக வருத்தபடும்போதும் , அதை ரஜினி அழகாக புரிஞ்சுக்கும் போதும் ரெண்டு பேரும் வெளுத்து வாங்கி இருப்பாங்க!!!

ஷ்ரிவித்யாவும் ஜெயசங்கரும் எல்லாருமே நல்லா நடிச்சு இருப்பாங்க!!!!
பானுப்ரியா தான் கொஞ்சம் வேஸ்ட்னு தோனும்...
அதன் மூலம் கூட இவங்க நட்போட அழத்தை அழ்காக விளக்கி இருப்பார்!!!
இளையராஜாவோட இசை சொல்லவே வேண்டாம்.. எப்பொழுதும் போல சூப்பர்...
கடைசி காட்சில கூட சூப்பர் ஸ்டார் சூப்பர் நடிப்பு!!!!
நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்த படம்....
மணிரத்னம் நினைத்தால் கூட இப்படி ஒரு படத்தை திரும்ப தர முடியுமா அப்படிங்கரது சந்தேகம் தான்!!!!

புதிர் பார்கலையோ புதிர்!!!

ஜி3 அவர்களின் பஜில் பார்த்துட்டு நாமளும் போட்டது!!!!




புதிருக்கான விடைகள்!!!!
1) Seven Seas
2) Split level
3) Forgive and Forget
4) Tricycle
5) Missing you
6) Down Town
7) Cross Roads
8) First Aid
9) He's by Himself
10) Backward Glance

Thursday, January 25, 2007

பிரான்ஸ் நாட்டு அழகி!!!



புதுசா ஒரு பாரின் அம்மணி போட்டிருக்கேன்.. வந்து தரிசனம் பண்ணிட்டு போங்கப்பு!!! சண்டை எல்லாம் போடாதீங்க!!! ஒருத்தர் ஒருத்தரா வந்து தரிசனம் பண்ணுங்க!!!


Details
Name: Laetitie Caste

Date of Birth : May,11-1978

Meaning of her name : Joy

Place of Birth : France

Work : Model

Other Activity : Brown belt in Judo

Enjoys: Go carting

Has been a cover model for Elle, Cosmopolitan and Glamour

Tuesday, January 23, 2007

என் கணவர்!!!


என் அயர்ச்சியின் போது
உன் மடியில் என் தலை சாய்த்தேன்
என் அயர்ச்சி என்னை விட்டு
காணாமல் போனது!!!


என் கண்களில் சோகம் குடி கொள்ளும் போது
உன் கண்களால் என் கண்களை வருடினாய்
என் கண்களில் மகிழ்ச்சி
தாண்டவமாடியது!!!



வேலை பளுவினால் என் கைகள் வலித்த போது
உன் கைகளால் என் கைகளை தடவினாய்
என் கைகளின் வலி
உன்னுடையதானது!!!



யார் சொன்னது தாயால் மட்டுமே
தன்னலமற்ற அன்பை தர முடியும் என்று!!
என் அன்பாலும் தர முடியும்
தன்னலமற்ற அன்பை




இந்த தன்னலமற்ற அன்பினை
அனுபவிக்க இன்னும் எத்தனை
ஜன்மங்கள் வேண்டுமானலும் அடைவேன்
அன்பே உன்னை என் கணவராய்!!

உன் பார்வையின் மகத்துவம் !!!!

இந்த ப்ளாக்குக்கு என்னுடைய பதில்!!!!

எத்தனை சிகரெட்/மது அருந்தினால் என்ன??
புற்று நோய் வந்தால் தான் என்ன???



உன் விழியின் ஒரு வீச்சு போதுமே
என் புற்று நோய் காணாமல் போக



செயற்கையாக என்ன??
இயற்கையாகவே சாக தயார்!!!
உன் இதழின் ஒரு துளி அமிர்தம் போதுமே
என்னை மீண்டும் உயிர்ப்பிக்க!!!

Monday, January 22, 2007

ஆதலினால் ப்ளாக் எழுதுவீர்!!! - II




இந்த ப்ளாக் அம்பி சார் எழுதினதுனால நானும் அதை பத்தி எழுதலாம்னு!!!!

ப்ளாக் எழுதர்துனால அவங்க அவங்க லெவல்ல உபயோகம் இருக்கு!!
அம்பி சாருக்கு ஒரு தங்கமணி கிடைச்சா போல எனக்கும் கிடைச்சு இருக்கு!!!
என்ன ரங்கமணியானு ஆச்சர்ய பட வேண்டாம்!!!
ஒரு நல்ல நண்பர் தான்!!!
அவர்க்கிட்ட முதல் தடவை பேசும் போதே என்னவோ ரொம்ப நாள் பழகுன மாதிரி ஒரு உணர்ச்சி!! அந்த நண்பருக்கும் ஒரு நல்ல நகைசுவை உணர்வு... எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டோம் ரெண்டு பேரும்!!! இன்னும் கொஞ்ச நாள்ல அவரு என்னோட பக்கத்து வீட்டுக்கு வர போறார்.. பாக்கலாம்.. ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கும்னு நினைக்கிரேன்... நம்பளுக்கு எதுவும் தோணலைனா அவரு உதவி செய்ய மாட்டாரா???
சமையல் மற்றும் ப்ளாக் ரெண்டுலயும் தான்..
ஹி ஹி ஹி
யாருனு கண்டு பிடிங்க பார்க்கலாம்!!!!

அவருக்கு ஒரு கவிஜ!!!
மார்கழி மாதத்தில் இளஞ் சூரியனாய்
அக்னி நட்ச்சத்திரத்தின் போது இளம் தென்றலாய்
என்னை சோகத்தில் சிரிக்க வைக்கும் போது சார்லி சாப்ளினாய்
எனக்கு தைரியம் ஊட்டும் போது கிரன் பேடியாய்...
உன் அவதாரம் தான் ஒரு
தசாவதாரமோ??

Monday, January 08, 2007

மும்பையில் எனது சுகமான அனுபவங்கள்!!!!

சென்ற சனிக்கிழமை ஞாயிற்று கிழமைகளில் என்னுடைய கணவரின் அலுவகத்தில் ஒரு பிரிவு உபசாரனை விழாவிற்காக பம்பாய் செல்ல வேண்டி இருந்தது!!! இது என்ன பெரிய விஷயம் இதை போய் பெருசா ப்ளாக் எழத வந்துட்டியேனு நீங்க எல்லாம் நினைக்கலாம்!!!அங்கே நடந்த பல நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணம் தானுங்கோ!!நாங்க எல்லாரும் தங்குவதர்க்காக ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதத்திற்க்கு முன்பே ஏற்பாடு செய்ய பட்டிருந்தது!!நாங்க பெங்களூர்லேர்ந்து காலை 11.30மணிக்கு விமானதில் ஏறி பம்பாய் 12.45 மணிக்கு அங்கு சென்று மதியம் 1.30 மணி அளவில் ஹோட்டில் சென்று அங்கு தங்குவதாக ப்ளான்... நாங்கள் பம்பாயில் இறங்கியவுடன் அங்கு எங்களுக்காக ஹோடலில் இருந்து கார் வந்து இருந்தது.. என்னுடைய கணவரின் ஒரு சிநேகிதர் எங்களை அவருடைய வீட்டிற்க்கு அழைத்து செல்ல வந்து இருந்த காரணத்தால் ஹோடலில் இருந்து வந்த ஒட்டுனரிடம் நாங்கள் வேறு ஒரு இடத்திற்க்கு செல்வதால் அவருடன் வர இயலாது எனவும் 3.30மணி அலவில் ஹோடலுக்கு வருவோம் என்றும் சொல்லி அவரை அனுப்பிவிட்டு நண்பரின் வீட்டுக்கு சென்று உணவருந்தி விட்டு ஹோட்டலுக்கு சென்றால் வந்துது சோதனை!! எங்களை ஒரு மணி நேரம் தேவுடு காக்க வைத்து விட்டு தான் தங்குவதற்க்கு அறை குடுத்தார்கள்... கேட்டதர்க்கு அறையை சுத்தம் செய்து கொண்டிருபதாக தகவல்!!! தலைஎழுத்து!!!!சரி என்று மாலை கிளம்பி பிரிவு உபசாரணை நடக்கும் இடத்திற்க்கு சென்றோம்.. அங்கு எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டிய இடத்தில் பார்த்தால் வேறு ஒரு அலுவலகத்தின் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது!!!ஒரு வழியாக நாங்கள் விழாவை முடித்து சாப்பாடிற்க்கு சென்றால் அங்கு தட்டுக்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன!!சரின்னு சாப்பாட்டுக்கு போய் கைல பீங்கான் தட்டு எடுத்தா அதுல கருப்பு கருப்பா இருந்துச்சு.. சரின்னு அங்க இருந்த அண்ணாச்சிய என்னங்க இதுனு கேட்டா அவரு அது தட்டுல இருக்கிற டிசைன்னு சொல்லிட்டாரு!!! சரினு கைல குடுத்த தட்ட டிஸ்சு காகித்தால துடைச்சா ஒரே கருப்பு கருப்பா அழுக்கு!!!!இதுக்கு ஒரு ப்ளேட்டுக்கு ஆயிரம் ரூபாயிக்கு மேல செலவு!!!சரின்னு ரூம்முக்கு வந்து தூங்கியாச்சு!!!எல்லாத்துக்கும் கீரீடம் ஞாயிற்று கிழமை தானுங்க!!!
ஞாயிற்றுக்கிழமை காலைல மின்சாரம் இல்லை!!! பத்து இருபது நிமிடங்கள் வரவே இல்லை!! சரின்னு கிழ ரிசெப்ஷனுக்கு தொலை பேசில ஏங்க மின்சாரத்துக்கு பேக் அப் எதுவும் இல்லையானு கேட்டேன்.. ஒ!! இருக்கு அனுப்பி வைக்கிரேன்னு சொன்னாங்க!! என்ன அனுப்பி வைக்க போரீங்கனு கேட்டா மெழுகுவர்த்தினு சொன்னங்க பாருங்கா வாழ்க்கையே வெறுத்து போச்சு!!!
வாழ்க மும்பை!!! வாழ்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்!!!