Wednesday, April 23, 2008

ஈர்ப்பு விசை எதிரி கவிஜ!!!




புவி தன் ஈர்ப்பு விசையினால் அனைத்து
பொருட்களையும் தன்வசம் இழுக்கும்
ஆனால் அன்பே உன் கண்களின்
ஈர்ப்பு விசையினால் நானோ காற்றில் மிதக்கிறேன்!!!

Thursday, April 10, 2008

முதல் மொக்கை................!!!!!!!!

ரொம்ப நாள் ஆச்சு பதிவு எழுதி.. ஏற்கனவே நமக்கு நிறைய விஷயம் இருக்கும் எழுதறதுக்கு.. இதுல ரொம்ப நாள் வேற ஆச்சா அதுனால மூளை வேலையே செய்ய மாட்டேன்கிறது.. (அது யாருப்பா மூளை எல்லாம் உங்களுக்கு இருக்கான்னு கேள்வி கேட்கறது.. கேள்வி கேட்கறது ரொம்ப சுலபம் ஆனா பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெர்யுமா.. :) ).
இத்தனை நாள் நடந்த விஷயங்கள பத்தி எழுதினாலே ஒரு ரெண்டு/மூணு பதிவு போட்டுரலாம் .. நம்ம தானை தலைவி (க்ர்ர்ர்ர் வார்த்தையின் மொத்த மொத்த குத்தகையே இவங்க கிட்ட தான் ..... கோச்சிகாதீங்க ஆபிசர்........) கீதா மேடம் ஒரு நாள் சாட்ல வந்து உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சுன்னு கேட்டாங்க.. அதுக்கு நான் பத்து வருஷத்துக்கு மேலேயே ஆகிடிச்சினு சொன்னேன்... அவங்க உடனே.. 7year marriage itch எல்லாம் தாண்டி வந்துடீங்கலானு கேட்டாங்க.. நானும் எஸ்ஸுனு சொன்னேன்.. அதுக்கு அவங்க மௌலி சார்க்கு ஒரு போட்டி வெச்சி இருக்கேன்னு சொல்லிட்டாங்க.. மௌலி சார் வேற டிடி அக்கா எனக்கு உதவி பண்ணுங்க 7 year marriage itch அப்படினா என்னனு ஒரு பதிவு போடுங்கனு சொல்லிடாரு.. மேட்டரே இல்லாம திண்டாடிட்டு இருந்த நம்மக்கு நல்ல மேட்டர் கிடைச்சுதுன்னு இப்ப 7 year marriage அதை பத்தி பேச போறேன்..
பெருசா ஒண்ணும் இல்லீங்க .. அதாவது கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள பார்க்க ஆரம்பிசிடுவாங்கனு ஒரு கருத்தாய்வு சொல்லுதாம்.. இத மையமா வெச்சி 1954ல ஒரு படம் எடுத்து இருக்காங்க.. அதுல மர்லின் மான்றோ நடிச்சி இருக்காங்க.. இதுல உலக பிரசித்தி பெற்ற அவங்களோட ப்ராக் இடுப்புக்கு மேல பறக்குற காட்சி வருது.. ஆனா அது அந்த காலத்துல தடை செய்யப்பட்டு படத்தில் காட்ட படவில்லை என்று நம்ம கூகுளார் தகவல்..




நாம தடை செய்யாம மேல போட்டுருகோம்ல .... மன்னிச்சிக்குங்க அப்பு சிறுசா தான் கிடைச்சிச்சு படம்.. இப்பதிக்கி இவ்வளவு தாங்க நம்ம மொக்கை... மீண்டும் அதுத்த பதிவுல சந்திக்கலாமா இன்னொரு மொக்கையோட??

அப்புறம்... நம்ம எப்பவும் போடுற மாதிரி நமக்கு கிடைச்ச அழகி - மிதுனா பார்த்துக்குங்க..






கடைசியா கிடைத்த தகவலின் படி நான் போட்ட அந்த அழகான பெண் ஒரு ஹாலிவுட் நடிகையாம்...

Thursday, February 21, 2008

நன்றிகள் சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லையே எனக்கு...

என்னுடைய பிறந்த நாளுக்கு தொலைப்பேசி/ ப்ளாக் யுனியன் பதிவு/ ப்ளாக் யுனியன் யாஹூ க்ரூப்ஸ்/ ஜி-டாக்.. மூலமாக வாழ்த்துக்கள் கூறிய அனைத்து அன்பு நெஞ்சஙளுக்கும் என்னுடைய நன்றிகள்.....


Wednesday, January 30, 2008

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ..............

என் தம்பிங்க எல்லாம் இந்த பொண்ணு யாருன்னு தெரியாம ரொம்ப கஷ்ட படறாங்க.. கொஞ்சம் உதவி தேவை...





Tuesday, January 22, 2008

ஆப்பு வைக்க அணி திரண்டு வாரீர்..

நம்முடைய வலைதளத்தில் அதிக நாளாக இல்லாமல் குறைந்த காலமே இருந்தாலும் எல்லாருக்கும் ஆப்பு வைக்கிற தைரியம் வந்துள்ள துள்ளும் ஒரு சிறிய மீனுக்கு வலை விரித்து வித விதமான ஆப்புகள் வைக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விட படுகின்றது.. எல்லாரும் வித விதமான ஆப்புகளை அள்ளி தெளிகுமாறு கேட்டு கொள்கிறேன். ..
தன்னுடைய ஒரே பதிவின் மூலம் தானை தலைவிக்கும், ப்ளாக் யூனியன் தலைவிக்கும், அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அம்பிக்கும், அபி அப்பாவிற்கும் ஆப்பு வைத்துள்ளார்.. சில காலமே பதிவு திறந்து ஆகிறது என்றாலும் ஏன் இப்படி என்று தெரியவில்லை.. .சரி நீங்க வாங்க உங்க ஆப்பை அள்ளி தெளிங்க.....

ஸ்டார்ட் மீஜிக்........

Wednesday, January 09, 2008

New Year Resolution

அடுத்த பதிவு "ஒருத்தருக்கு ஆப்பு" வைப்பதற்கான அழைப்பா இருக்கும்.. எல்லாரும் வந்து உங்க ஆப்புகளை தாராளமாக அள்ளி தெளித்து உங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன்..

புத்தாண்டு சபதத்தை பற்றி எழுத கீதா மேடம் நமக்கு அழைப்பு விடுட்டுடாங்க.. ப்ளாக் உலகத்துக்கே தலைவிய இருக்கறவங்க, ஆன்மீக பயணத்துல கலக்குரவங்க, அம்பியுடன் அடிக்கடி மோதரவங்க, மொக்கை பதிவுகளால் கலக்குரவங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்கரவங்க (கம்மென்ட்ட சொன்னேங்க..) இத்தனை பெருமைக்குரியவங்க கூப்பிட்டு நம்ம பதிவு போடலேனா நமக்கு தானே கேவலம்.. அதுனால தான் .. (இது என்ன புத்தாண்டு சபதமா இல்ல தலைவியின் பிரதாபமா?? அப்படின்னு சந்தேகமா இருக்கா .. என்ன பண்றது தலைவி தான் தன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதனம்னு சொன்னாங்க....)
அவிங்களுக்கு என்ன கோவமோ என்ன இழுத்து விட்டுட்டாங்க.. பொதுவா எனக்கு இந்த சபத்துல எல்லாம் நம்பிக்கை கிடையாதுங்க.. நாம சபதம்னு ஒன்னு எடுத்தா அதை எப்படி பண்ணாம இருக்கறதுன்னு மொதல்ல பார்ப்போம். அது செஞ்சா என்னல்லாம் நெகடிவ் பாயிண்ட் இருக்குன்னு மொதல்ல தேடற நல்ல மனசு.. அதுனால இந்த வம்புக்கே நான் போறது இல்ல..
இந்த வாட்டி நம்மள எழுத சொன்னதால ஏதாவது சபதம் எடுக்கலாம்னு யோசிச்சி ரெண்டு எடுத்து இருக்கேன்..
1) மொதல்ல என்னோட ரங்கமணி நல்லா கவிதை எல்லாம் எழுதுவாரு.. இந்த வருஷம் முடியர்த்துக்குள்ள அவர ஒரு நல்ல கவிதை எழுத சொல்லி என்னோட பதிவுல அதை போடணும்.. (சே!! ரங்குவ கவிதை எழுத வைக்க நான் சபதம் போட வேண்டி இருக்கு.)
2) இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்.. (எதுக்கு உனக்கு வராதது எல்லாம் அப்படின்னு நீங்க கேகர்த்து காதுல விழுது.. ஆனா வராதத செய்யறது தானே சபதம்.. இல்லீங்கள??) ஹி ஹி ஹி ...