Friday, December 15, 2006

கவிதை !! கவிஜ !! கதை!! கருத்து!!



ஹலோ !!!
யார் யாருக்கு இந்த படத்தை பார்த்து என்ன தோணுதோ எழுதுங்க சீக்கிரம்...

ஓரு ரோஜா பூ
மற்ற பூக்களுடன்
பேசிக் கொண்டு இருக்கின்றதே!!

நானும் நீயும் பிறக்கும் போது
மென்மையானவர்கள் தான்..

நாள் செல்ல செல்ல நீ வாடி விடுகின்றாய் - தட்ப வெப்பதினால்

நானோ வாட்ட படுகின்றேன் - என்
சக மனிதர்களால்...

எல்லாரும் சீக்கிரமா போடுங்க உங்க கருத்துகளை!!

7 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

//"நானோ வாட்ட படுகின்றேன் - என்
சக மனிதர்களால்..."//

இது தான் நிஜம்.. இது ரொம்ப நல்லாயிருக்கும்மா

இந்த குழந்தை எத்தனை ஆசையா பூ பறிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கு.. பாக்கவே அழகாயிருக்கு...

ம்ம்ம்ம்ம்.... என்ன நாம கூட இதே மாதிரி குழந்தையாவே இருந்திருக்கலாம்...சந்தோஷமாவும் தான்.....

Divya said...

\"நானும் நீயும் பிறக்கும் போது
மென்மையானவர்கள் தான்..\"

வாவ் சுமதி, சூப்பரா எழிதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள்!
தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் சுமதி.

Divya said...

சுமதி, நீங்க comment moderation செய்துக் கொள்வது நல்லது.........

நாமக்கல் சிபி said...

//ஓரு ரோஜா பூ
மற்ற பூக்களுடன்
பேசிக் கொண்டு இருக்கின்றதே!!//

இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு...

ஒரி குழந்தையால
//நானோ வாட்ட படுகின்றேன் - என்
சக மனிதர்களால்...//
இப்படி சிந்திக்க முடியாது... சிந்திக்கவும் வேண்டாம் :-)

Anonymous said...

Malarkalin mathiyil
avalum oru malarai

Poopontavale,
pooppola poovai parikirai
neeyea oru poo entu ariyamal

Malarinum sirantha malarai nee.

Iravan unn ninaival pookalai
padaithano -yaaro

dubukudisciple said...

ஹாய் அனானி!!!
கவிதை சூப்பர்.... நீங்க கவிதைகளை இடுவதர்காக ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமே!!!

dubukudisciple said...

/anaani said............
மலர்களின் மத்தியில்
அவளும் ஒரு மலராய்

பூபோன்றவளே,
பூப்போல பூவை பறிக்கிறாய்
நீயே ஒரு பூ என்று அறியாமல்

மலரினும் சிறந்த மலராய் நீ.

இறைவன் உன் நினைவால் பூக்களை
படைத்தனோ -யாரொ ///