Wednesday, January 09, 2008

New Year Resolution

அடுத்த பதிவு "ஒருத்தருக்கு ஆப்பு" வைப்பதற்கான அழைப்பா இருக்கும்.. எல்லாரும் வந்து உங்க ஆப்புகளை தாராளமாக அள்ளி தெளித்து உங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன்..

புத்தாண்டு சபதத்தை பற்றி எழுத கீதா மேடம் நமக்கு அழைப்பு விடுட்டுடாங்க.. ப்ளாக் உலகத்துக்கே தலைவிய இருக்கறவங்க, ஆன்மீக பயணத்துல கலக்குரவங்க, அம்பியுடன் அடிக்கடி மோதரவங்க, மொக்கை பதிவுகளால் கலக்குரவங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்கரவங்க (கம்மென்ட்ட சொன்னேங்க..) இத்தனை பெருமைக்குரியவங்க கூப்பிட்டு நம்ம பதிவு போடலேனா நமக்கு தானே கேவலம்.. அதுனால தான் .. (இது என்ன புத்தாண்டு சபதமா இல்ல தலைவியின் பிரதாபமா?? அப்படின்னு சந்தேகமா இருக்கா .. என்ன பண்றது தலைவி தான் தன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதனம்னு சொன்னாங்க....)
அவிங்களுக்கு என்ன கோவமோ என்ன இழுத்து விட்டுட்டாங்க.. பொதுவா எனக்கு இந்த சபத்துல எல்லாம் நம்பிக்கை கிடையாதுங்க.. நாம சபதம்னு ஒன்னு எடுத்தா அதை எப்படி பண்ணாம இருக்கறதுன்னு மொதல்ல பார்ப்போம். அது செஞ்சா என்னல்லாம் நெகடிவ் பாயிண்ட் இருக்குன்னு மொதல்ல தேடற நல்ல மனசு.. அதுனால இந்த வம்புக்கே நான் போறது இல்ல..
இந்த வாட்டி நம்மள எழுத சொன்னதால ஏதாவது சபதம் எடுக்கலாம்னு யோசிச்சி ரெண்டு எடுத்து இருக்கேன்..
1) மொதல்ல என்னோட ரங்கமணி நல்லா கவிதை எல்லாம் எழுதுவாரு.. இந்த வருஷம் முடியர்த்துக்குள்ள அவர ஒரு நல்ல கவிதை எழுத சொல்லி என்னோட பதிவுல அதை போடணும்.. (சே!! ரங்குவ கவிதை எழுத வைக்க நான் சபதம் போட வேண்டி இருக்கு.)
2) இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்.. (எதுக்கு உனக்கு வராதது எல்லாம் அப்படின்னு நீங்க கேகர்த்து காதுல விழுது.. ஆனா வராதத செய்யறது தானே சபதம்.. இல்லீங்கள??) ஹி ஹி ஹி ...

27 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

//தலைவி தான் தன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதனம்னு சொன்னாங்க....)//

ஓஓஓ..தலைவி இப்படிதான் பெரிய்ய்ய ஆளானாங்களா? அட இது கூட நல்லாத் தான் இருக்கு.

Sumathi. said...

ஹாய் சுதா,

//நாம சபதம்னு ஒன்னு எடுத்தா அதை எப்படி பண்ணாம இருக்கறதுன்னு மொதல்ல பார்ப்போம்.//

அப்ப அதுக்கு பேர் தான் சபதமா?

Sumathi. said...

ஹாய் சுதா,

//அதுனால இந்த வம்புக்கே நான் போறது இல்ல..//

அட நீங்க எதுக்கு அத தேடிட்டு போகனும்? அதா உங்களை தேடி வரும். அப்ப எதாவது பண்ணினா போதும்.ஹி ஹி ஹி...

Sumathi. said...

ஹாய் சுதா,

// இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்.. (எதுக்கு உனக்கு வராதது எல்லாம் அப்படின்னு நீங்க கேகர்த்து காதுல விழுது)//

அதானே நீங்க காமடி படம் போடப் போறீங்களா? இல்ல காமடி பதிவு போடப் போறீங்களா?

அப்ப ஒரு ஆப்பு பதிவு ஏன் இன்னும் ஆரம்பிக்கலை?

Sumathi. said...

சரி வந்ததுக்கு ஒரு 5 போட்டாச்சு யக்காவ்...பாத்துக்குங்க...

dubukudisciple said...

ஓஓஓ..தலைவி இப்படிதான் பெரிய்ய்ய ஆளானாங்களா? அட இது கூட நல்லாத் தான் இருக்கு.///
ammam idu theriyanamnu thaan poten

dubukudisciple said...

அப்ப அதுக்கு பேர் தான் சபதமா///
adu thaan DDyin sabatham

dubukudisciple said...

அட நீங்க எதுக்கு அத தேடிட்டு போகனும்? அதா உங்களை தேடி வரும். அப்ப எதாவது பண்ணினா போதும்.ஹி ஹி ஹி...///
aduva enna thedi varuma.. seri wait panren

dubukudisciple said...

அதானே நீங்க காமடி படம் போடப் போறீங்களா? இல்ல காமடி பதிவு போடப் போறீங்களா?//
ennanga idu comedy padhivunu thaane potu irukenn.. ippadi kekareengale

dubukudisciple said...

சரி வந்ததுக்கு ஒரு 5 போட்டாச்சு யக்காவ்...பாத்துக்குங்க...//
seringa ungaluku oru puliyodarai parcel

ரசிகன் said...

//இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்.//

டீடீ அக்கா.. சூப்பரு.. நகைச்சுவையா கூட எழுதுவிங்களா?.. வாழ்த்துக்கள்.. வரவேற்க்கிறோம் மொக்கை உலகத்துக்கு..

கலக்குங்க..

ரசிகன் said...

//அடுத்த பதிவு "ஒருத்தருக்கு ஆப்பு" வைப்பதற்கான அழைப்பா இருக்கும்.//

அவ்வ்வ்வ்..... ஆரம்பத்துலயே தலைவிக்கு வைச்சுட்டிங்க.. எனக்கு மட்டும் வேணாங்க... அதான் ஆதரவு தர்ரோம்ல்ல...:)))

// இது என்ன புத்தாண்டு சபதமா இல்ல தலைவியின் பிரதாபமா?? அப்படின்னு சந்தேகமா இருக்கா .. என்ன பண்றது தலைவி தான் தன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதனம்னு சொன்னாங்க....//

அதென்னவோ இந்த வருஷம் எங்க டீச்சருக்கு ஆப்பு வருஷமாகிடுச்சோ?..
வருஷ மொதல்ல ஒரு ஆப்பு பதிவு போட்டு ஆரம்பிச்சு வைச்சேன்.. இப்ப ஆளுக்கு ஆள் எங்க தலைவிய வம்புக்கு இழுத்தா.. என்ன அர்த்தம்..
அப்புறம் எங்க தலைவி பதிலடி கொடுத்தா...என்னாகுமின்னு கொஞ்சம் யோசிச்சு பார்க்கவும்..

ரசிகன் said...

ஏனுங்க சுமதி.. அவிங்க தானே காமெடி பதிவு போடப்போறேன்னாங்க..
நீங்க பின்னூட்டத்துல கலக்கிக்கிட்டிருக்கிங்க...:)))

( இதுக்கெல்லாம் மட்டும் நேரம் இருக்கும்.. ஆனா நாங்க கேட்டா மொக்கை செயின் பதிவு போட நேரம் கெடக்காதே :P )

dubukudisciple said...

டீடீ அக்கா.. சூப்பரு.. நகைச்சுவையா கூட எழுதுவிங்களா?.. வாழ்த்துக்கள்.. //
Theriyathu.. ezhuthanumnu sabatham thaan potu iruken.. inime thaan yosikanum

//வரவேற்க்கிறோம் மொக்கை உலகத்துக்கு..//
enna solla vareenga.. nagaichuvai padivu ellam mookkaina??

dubukudisciple said...

அவ்வ்வ்வ்..... ஆரம்பத்துலயே தலைவிக்கு வைச்சுட்டிங்க.. எனக்கு மட்டும் வேணாங்க... அதான் ஆதரவு தர்ரோம்ல்ல...:)))
////
aduththa padivula thaan therium yaruku aapnu...

dubukudisciple said...

ஹிஹி நீங்களுமா? :D///
same blood

dubukudisciple said...

வெரிகுட் அதை செய்யுங்க முதல்ல :)//
sabatham potu irukome.. parkalam

ஓ அப்ப நீங்க மேல சொல்லியிருக்கற ஆப்பு இந்த வகையில் தான வரும் நிச்சயமா நம்ம ஆதரவு உண்டு (கண்டிப்பா எனக்கு இருக்காதுங்குற ஒரு தைரியம் தான் அக்கா;))
///
adutha padivula thaan therium yaruku aapunu.../

Dreamzz said...

Wow Template is nice :)

Dreamzz said...

//மொதல்ல என்னோட ரங்கமணி நல்லா கவிதை எல்லாம் எழுதுவாரு/
seekiran podunga :)

Dreamzz said...

//இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்..//
superu!

Dreamzz said...

//அடுத்த பதிவு "ஒருத்தருக்கு ஆப்பு" வைப்பதற்கான அழைப்பா இருக்கும்//
yaarathu maatinathu?>

Sumathi. said...

ஹாய் சுதா,

ஹா ஹா ஹாஹா ஹா... தலவி மேலே ஆப்புனு போட்டாலும் போட்டீங்க பார்த்தீங்களா எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க..ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க..என் முழு ஆதரவும் உண்டு.(ஆப்பு எனக்கானாலும் சரி)

தி. ரா. ச.(T.R.C.) said...

//இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்

பக்கத்து வீட்டுக்காரரிடம் கொஞ்சம் கடன் வாங்கலாமே.எவ்வளவு நாளைக்குத்தான் கடன்கொடுத்துக்கிட்டே இருக்கறது

sury siva said...

வலைப்பதிவின் தலைப்பே ஏதோ இடி விழுகிறார்போல்
பரணியிலிருந்து ஏதோ ஒன்று படேல்ன்னு விழுந்ததுபோல்
இருக்கும்போது புதிதாய் என்ன காமெடி வேண்டியிருக்கு ?


டுபுக்கு டிசைப்பிள் என்ன‌வாயிருக்கும் என்று யோசித்தேன்.


டு வில் ஆர‌ம்பித்தால் துஷ்ட‌ன், துரியோத‌ன‌ன், துடிதுடிப்பான‌வ‌ன் என‌ வ‌ருகிற‌து.

பு வில் ஆர‌ம்பிப்ப‌து புத்திசாலி என‌க் கொள்ள‌லாம்.

ஆக‌, ஒரு துஷ்ட‌ ஆயினும் துடிதுடிப்பான‌ ஒரு புத்திசாலிக்கு நீங்க‌ள் டிசைப்பிள்
என‌ புரிய‌ வ‌ருகிற‌து.

எத்த‌னை கால‌ம் தான் நீங்க‌ள் டிசைப்பிள் ஆக‌ இருப்பீர்க‌ள்.

2008ம் வ‌ருட‌ம் நான் குருவை மிஞ்சிய‌ சிஷ்ய‌ன் ஆவேன் என‌
ச‌ப‌த‌ம் எடுத்துக்கொள்ளுங்க‌ள்.

இப்ப‌டிக்கு,
அழையாத‌ விருந்தாளி

சூரி
சென்னை.

Geetha Sambasivam said...

//புத்தாண்டு சபதத்தை பற்றி எழுத கீதா மேடம் நமக்கு அழைப்பு விடுட்டுடாங்க.. ப்ளாக் உலகத்துக்கே தலைவிய இருக்கறவங்க, ஆன்மீக பயணத்துல கலக்குரவங்க, அம்பியுடன் அடிக்கடி மோதரவங்க, மொக்கை பதிவுகளால் கலக்குரவங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்கரவங்க (கம்மென்ட்ட சொன்னேங்க..) இத்தனை பெருமைக்குரியவங்க கூப்பிட்டு நம்ம பதிவு போடலேனா நமக்கு தானே கேவலம்.. அதுனால தான் .. (இது என்ன புத்தாண்டு சபதமா இல்ல தலைவியின் பிரதாபமா?? அப்படின்னு சந்தேகமா இருக்கா .. என்ன பண்றது தலைவி தான் தன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதனம்னு சொன்னாங்க....)//
ஹிஹிஹி, ரெண்டு நாள் வந்து வந்து பார்த்தேன், இந்த டெம்ப்ளேட் மாத்தித் தொலைச்சிருக்கீங்க போலிருக்கு, டிடி அக்கான்ற பேரிலே யாருமே இல்லைனு சொல்லிடுச்சு! ஒரே வெறுப்பில் இருந்தேனா, இன்னிக்குத் தான் மனசு சமாதானம் ஆயிடுச்சு,

ஹிஹிஹி, இவ்வளவு புகழ்ச்சியா? எனக்குப் புகழ்ச்சியே பிடிக்காதுன்னு தெரியாதா உங்களுக்கு? போகுது, தாயுள்ளத்தோடு மன்னிக்கிறேன். அது சரி, இது என்ன வேறே யாரும் "மொக்கை போஸ்ட்" டாக் கொடுத்தாங்களா என்ன? பார்த்தால் சபதம் போஸ்டா இல்லை மொக்கையானு சந்தேகமா இருக்கே? :P

Geetha Sambasivam said...

//மொதல்ல என்னோட ரங்கமணி நல்லா கவிதை எல்லாம் எழுதுவாரு//

ரங்கமணியின் திறமையை அடக்கி வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். டிடியோட ரங்கமணிக்கு என்று ஒரு தனி வசூல் ஆரம்பிக்கணும். அதை அவரை விட்டு எனக்குத் தனியாக் கொடுக்கச் சொல்லிடுவேன். :P

Devilish Angel said...

:)