

இரவு நேரத்தில் குதுப்மினார்

அழகான கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. குதுப் உதின் ஐபக் என்பவரால் ஆரம்பிக்க பட்டு அவருடைய மருமகன் இல்டுமிஷ் என்பவரால் மேலும் சில மாடிகள் கட்டப்பட்டு பிருஸ் ஷா என்பவரால் முடிக்க பட்டது.. இது 72.5மீட்டர் உயரம் உடையது. உலகிலேயே மிக உயரமான கற்களால் செய்ய பட்ட மினரெட் இந்த குதுப்மினார் ....

குதுப்மினரோட அழக ரசிச்சிகிடே நாம அடுத்ததா போக போற இடம் தாமரை கோவில்.. இதுக்கு இன்னொரு பெயர் ஜந்தர் மந்தர்.. இந்த இடம் மிகவும் அழகாக தாமரை பூவை போன்று வடிவமைக்க பட்டுள்ளது.. ஒன்பது நுழைவாயில்களை கொண்ட இந்த கோவிலில் இரண்டயிராத்து ஐந்நூறு பேர் உட்காரும் வசதி படைத்தது ... இதன் உள்ளே நுழைந்தால் மனதில் ஒரு பெரிய அமைதி நம்மை ஆட்கொள்கிறது என்றால் மிகைஆகாது.. உள்ளே நுழைவதற்கு முன்பே நம்மை அமைதி காக்க வேண்டுகின்றனர்.

முகலாய கட்டிட கலைக்கு ஒரு குதுப்மினார் என்றால் நம்முடைய கட்ட கலைக்கு ஒரு அக்ஷர்தாம் கோவில் என்றால் அது தவறல்ல ..அழகான ராஜஸ்தானில் இருந்து எடுத்து வந்த பிங்க் நிற கற்களால் செய்ய பட்டுள்ளது...

மார்பிளிலும் சிற்பங்கள் செதுக்க பட்டுள்ளது.. நான் எத்தனை அந்த கோவிலை பற்றி கூறினாலும் அதன் அழகை நீங்களே கண்களால் கண்டு களியுங்கள்.. உங்கள் பார்வைக்காக சில படங்கள்..




அங்கு ஒரு மூன்று மணி வாக்கில் சென்றால் இரவு ஏழு மணி வரை நிடனமாக காணலாம்.. கேமரா, செல்போன் ஆகியவை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.. இரவில் விளக்குகளில் இதன் அழகை கான கண் கோடி வேண்டும். இரவில் இங்கு இசைகேற்ப நடமாடும் தண்ணீர் வீழ்ச்சி உள்ளது.. மற்றும் படகு சவாரியும் உள்ளது..
இதில் இன்ட்ரோ என்ற இடத்தில் க்ளிக்கவும்...இங்கு க்ளிக்கி அக்ஷர்தாமை நேரில் பார்த்த புண்ணியத்தை பெறவும்..
பதினேழு நிமிட வீடியோ பார்க்கவும்..
அடுத்து நாம் ஹரித்வாரில் சந்திப்போம்...