புத்தாண்டு சபதத்தை பற்றி எழுத கீதா மேடம் நமக்கு அழைப்பு விடுட்டுடாங்க.. ப்ளாக் உலகத்துக்கே தலைவிய இருக்கறவங்க, ஆன்மீக பயணத்துல கலக்குரவங்க, அம்பியுடன் அடிக்கடி மோதரவங்க, மொக்கை பதிவுகளால் கலக்குரவங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்கரவங்க (கம்மென்ட்ட சொன்னேங்க..) இத்தனை பெருமைக்குரியவங்க கூப்பிட்டு நம்ம பதிவு போடலேனா நமக்கு தானே கேவலம்.. அதுனால தான் .. (இது என்ன புத்தாண்டு சபதமா இல்ல தலைவியின் பிரதாபமா?? அப்படின்னு சந்தேகமா இருக்கா .. என்ன பண்றது தலைவி தான் தன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதனம்னு சொன்னாங்க....)
அவிங்களுக்கு என்ன கோவமோ என்ன இழுத்து விட்டுட்டாங்க.. பொதுவா எனக்கு இந்த சபத்துல எல்லாம் நம்பிக்கை கிடையாதுங்க.. நாம சபதம்னு ஒன்னு எடுத்தா அதை எப்படி பண்ணாம இருக்கறதுன்னு மொதல்ல பார்ப்போம். அது செஞ்சா என்னல்லாம் நெகடிவ் பாயிண்ட் இருக்குன்னு மொதல்ல தேடற நல்ல மனசு.. அதுனால இந்த வம்புக்கே நான் போறது இல்ல..
இந்த வாட்டி நம்மள எழுத சொன்னதால ஏதாவது சபதம் எடுக்கலாம்னு யோசிச்சி ரெண்டு எடுத்து இருக்கேன்..
1) மொதல்ல என்னோட ரங்கமணி நல்லா கவிதை எல்லாம் எழுதுவாரு.. இந்த வருஷம் முடியர்த்துக்குள்ள அவர ஒரு நல்ல கவிதை எழுத சொல்லி என்னோட பதிவுல அதை போடணும்.. (சே!! ரங்குவ கவிதை எழுத வைக்க நான் சபதம் போட வேண்டி இருக்கு.)
2) இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்.. (எதுக்கு உனக்கு வராதது எல்லாம் அப்படின்னு நீங்க கேகர்த்து காதுல விழுது.. ஆனா வராதத செய்யறது தானே சபதம்.. இல்லீங்கள??) ஹி ஹி ஹி ...