Wednesday, September 19, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..வாரனாசி (2)

என்னங்க கங்கை ஆரத்தி எல்லாம் நல்லா பார்த்தீங்களா?? போய் சேர்ந்த அன்னிக்கி அது தான் பார்த்தேன்..



கங்கைக்கு சில புனிதங்கள் எல்லாம் இருக்கு..அந்த தண்ணில மாத்திரம் பாசியே பிடிக்காது அதுனால நீங்க எவ்வளவு நாட்கள் வேணும்னாலும் அதனை ஒரு பாட்டிலிலோ இல்ல சொம்பிலோ வச்சிக்கலாம். அந்த தண்ணீல குளிச்சா பாவம் எல்லாம் போயிடும்னு நம்பறாங்க..அவ்வளவு சக்தி இருக்கு அந்த தண்ணீல. எல்லா விதமான அசுத்தங்களையும் போக்கும் சக்தி அந்த ஜலத்துக்கு இருக்கு..


இந்த காட் அப்படிங்கறதுல ரெண்டே ரெண்டு காட்ல தான் இறந்து போனவர்களுக்கான காரியங்கள் செய்ய விடுவாங்க.. அது வந்து மனிகர்னிகா காட், ஹரிஷ் சந்திரா காட். இந்த இடங்களுல பிணத்தை எரிப்பதை எல்லாம் நாம கண்ணால பார்க்கலாம். இங்கே தச அச்வமேத காட் அப்படினு ஒண்ணு இருக்கு. இங்கே பத்து அஸ்வமேத யாகங்கள் பிரம்மா செய்ததாக ஐதிகம்.துளசி காட் அப்படிங்கறது வந்து துளசிதாஸுக்கு அப்புறமா பேர் வந்தது.. அதுக்கு முன்னாடி இதுக்கு லொலர்க் காட் அப்படின்னு பேர் இருந்ததா சொல்லறாங்க..இங்கே தான் துளசிதாசர் தன்னோட ராமாயணத்தை பாடினதா சொல்றாங்க. அப்படி பாடும் போது அவருடைய சுவடி கங்கையில் விழுந்துவிட்டதாம். ஆனாலும் அச்சுவடி தண்ணீல முழுகாம மேலேயே மிதந்ததாம்.



அடுத்த நாள் காலையில ஒரு படகுல எல்லாரும் ஏறி ஹசி காட்லேர்ந்து ஒவ்வொரு காட்டா பார்த்து ரசிச்சிக்கிட்டே பஞ்ச கங்கா காட் கிட்ட வந்தாச்சுஅங்கேதான் இறங்கி கங்கைல குளியல்..குளியல் போட்ட அப்புறம் அங்கேயே மேலே வேணி மாதவன் கோயில் பார்க்கலாம்.அங்கே போய் அதை பார்த்த அப்புறம் அங்கேர்ந்து கொஞ்ச தூரத்துல காசி விஸ்வநாதர் கோயில் இருக்கு.. ரொம்ப சின்னதா இருக்கு இந்த கோயில்.. அதுக்கு பக்கத்துல நந்திக்கு தனியா ஒரு கோயில் இருக்கு அங்கேர்ந்து பார்த்தா ஒரு மசூதி தெரியும். முன்னாடி அதுதான் காசி விஸ்வனாதர் கோயிலா இருந்ததாக கூறுகின்றனர்..



காசி விஸ்வனாதர் தரிசனத்துக்கு பால், தூத்பேடா,கங்கை ஜலம், வில்வ மாலை எல்லாம் எடுத்துட்டு போறாங்க.கோயிலுக்குள் ஒரு பேனா கூட எடுத்து போக முடியாத படி பாதுக்காப்பு போட்டு வச்சிருக்காங்க.. அதுனால வெறும் கைய வீசிட்டு போவது நல்லது. இல்லாட்டி அங்கே ஏதாவது கடையில தான் வச்சிட்டு போகனும்.


காசி விஸ்வநாதரை தரிசனம் செஞ்சுட்டு வந்தா அப்புறம் விசலாட்க்ஷி,அன்னப்பூரணி அப்புறம் வட விருட்ஷம்
இது எல்லாம் தரிசனம் செய்யலாம்.இந்த வட விருட்ஷம் அப்படிங்கறது என்னனா ஒரு ஆல மரம். அதோட இலை எல்லாம் கயாவிலும், தண்டு இங்கே காசிலயும், வேர் அலகாபாத்லயும் இருக்கறதா ஐதிகம். காசிக்குனு ஒரு மூணு விஷயம் ப்ரபலமா இருக்கு அது என்னனு அடுத்த பதிவுல பார்க்கலாமா??
மீண்டும் காசியில் சந்திப்போம்...

Wednesday, September 12, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..வாரனாசி

சரி நல்லா ஒய்வு எடுத்தாச்சு.. ஞாயிற்றுக்கிழமை.
திங்கள் கிழமை கார்த்தால கிளம்பியாச்சு.. வாரனாசிக்கு..
காலை பதினோரு மணி அளவுல கிளம்பி சாயந்திரம் ஆறு மணிக்குப் போய் சேர்ந்தாச்சு..
அட என்னங்க ஊரு இது ...
எங்க பார்த்தாலும் ஒரே கூட்டம். நிறைய சைக்கிள் ரிக்க்ஷாவ பார்க்கலாம். ஊரும் சுத்தமா இல்லை..
இந்த ஊர்ல மிக பிரபலம்:
1) கங்கை நதி
2) காசி விஸ்வனாதர் கோயில்
3) வேணி மாதவன் கோயில்
4) அன்னப்பூரணி
5) வட விருட்ஷம்
6) ஆஞ்சநேயர் கோயில்
7) துளசி தாஸ் கோயில்


கங்கை:- கங்கைய பத்தி சொல்லனம்னா நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். அவ்வளவு அழகா இருக்கு..இங்கே நிறைய காட் அப்படினு படித்துறைகள் இருக்கு.. ஒவ்வோரு காட்டுக்கும் ஒவ்வொரு பேரு..அறுப்பத்தி நான்கு காட் இருக்கு..


இது தான் காட் அப்படிங்கறது

அசி காட், பஞ்சகங்கா காட், ப்ரயாக் காட், மணிகர்னிகா காட், ஹரிஷ்சந்திரா காட் இப்படினு பல பேரு..


இங்கே பார்க்கவேண்டியது சாயந்திரம் நடக்கும் ஆரத்தி.. ரொம்ப நல்லா இருக்கு. ஏழு மணிக்கு மேல கங்கைக்கு ஆரத்தி நடக்கிறது. அதோட சில போட்டோ எல்லாம் போட்டு இருக்கேன்.






மீண்டும் கங்கை கரையில் சந்திக்கலாம்.....

Monday, September 03, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..பாகம் இரண்டு...

ஒரு வழியா 2.25க்கு ராய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.. ஒரே பசி வேறு வயிற்றை கிள்ளியது..சரி ரயில் எத்தனை மணிக்கு எந்த ப்ளாட்பாரத்துக்கு வருதுன்னு தெரிஞ்சுக்க போனோம்.. நல்ல வேளையாக ரயில் பத்து நிமிடம் லேட்டுனு சொன்னாங்க.. சரி இன்னும் பதினைந்து நிமிடம் இருக்குனு என்னோட ரங்கு போய் அங்கே இருந்த ஓட்டலேர்ந்து ரெண்டு சாப்பாடு வாங்கிட்டு வந்தாரு.

அப்புறம் ஒரு வழியா லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு மாடிப்படி ஏறி ப்ளாட்பார்முக்கு வருவதற்க்கும் ட்ரேயின் வருவதற்க்கும் சரியாக இருந்தது.. நல்ல ஏசில புக் பண்ணிருந்தாரு.. இடம் பார்த்து உக்கார்ந்தோம்..அப்புறம் சாப்பாட்டை தொறந்து சாப்பிட்டோம்.. சும்மா சொல்லக்கூடாது சூப்பரா இருந்துச்சி சாப்பாடு.. நாலு சப்பாத்தி, ஒரு கப் சாதம், ஒரு தால், ஒரு பன்னீர் கரேவி, வென்டைக்காய் கறி,தயிர், குலோப் ஜாமுன், அப்பளாம், ஊறுகாய் எல்லாம் அழகா பேக் பண்ணி குடுத்திருந்தாங்க. ரயில் நிலையத்தில் இவ்வளவு நல்ல சாப்பாட்டை நான் எதிர்ப்பார்க்கவில்லை..நல்லா சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம். அதுக்குள்ள பிலாஸ்பூர் வந்துடுச்சி..ராய்ப்பூரிலிருந்து 1.30 மணி நேரம்.. 4.30 மணிக்கு போயாச்சு. அங்கே என்னுடய கஸின் வந்திருந்தாரு எங்களை கூட்டி கொண்டுப்போக. அங்கிருந்து அவங்க வீட்டுக்கு சரியா 6 மணி நேரம் எடுக்குமாம்.
இரவு 11 மணி ஆகி விட்டது அவங்க வீட்டுக்கு போய் சேருவதற்கு. என்னுடைய கஸின் கோல் இந்தியாவில் வேலை செய்கிறார். இந்த மாதிரி ஒரு ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு ஊர். அது டவுனா?? சிட்டியா?? கிராமமா?? எதுவுமே சொல்ல முடியாத ஒரு இடம். இங்க இருக்கிறவங்க எல்லாம் அவங்க அவங்க ஊர்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லை உடனே போகனம் அப்படினாக்கூட ஒரு நாள் வேணும். ப்ளைட்ல போகனம்னா கூட ஒன்னு ராய்ப்பூர் வரணம். இல்லட்டி வரனாசி வரணம். ரொம்ப கஷ்டம்..ரயில்னா தென்னிந்தியா வறத்துக்கு மூனு நாள் வேண்டும்.
நாங்க பயணம் செஞ்ச வழி நெடுகிலும் ஒரு பஸ்ஸைக்கூட காணம். என்னோட கஸினுக்கு ஒரே சந்தோஷம். அவங்க இங்க வந்த ஒரு பதினைந்து வருஷத்துல அவங்க வீட்டுக்கு வந்த முதல் சொந்தம் நாங்க தான். என்னங்க பண்றது.. அவ்வளவு தள்ளி இருக்கு அந்த இடம். பக்கத்துல பார்க்கறதுக்கும் ஒண்ணும் கிடையாது. என்னனா ஒரு நல்ல பிரேக். நம்ம இருக்கிற ஒரு ஒட்டமான வாழ்வை தான்டி அமைதியா ஒரு வாழ்க்கை. பி.ஏஸ்.என்.எல்லை தவிர ஒரு மோபைல் நெட்வர்க்கும் வேலை செய்யலைனு ஒரே சந்தோஷம் எனக்கு.
சரி களைப்பு நீங்க இன்னிக்கி ரெஸ்ட் எடுப்போம்.. அப்புறம் அடுத்த எடத்துக்கு போவோம் சரியா??