எல்லா மக்களுக்கும் வணக்கம்..
எப்படி நடந்தது அம்பி கல்யாணம்.. யாருமே சொல்லலியேனு எல்லாரும் வருத்த பட்டுக்கிட்டு இருக்காங்க.. சரி நாம தான் எல்லா வேளையும் இருந்தோமே சொல்லிடலாம்னு ஆரம்பிச்சாச்சு.. போட்டோக்கள் நாளை நம்ம யாஹூ க்ருப்ஸ்ல போடப்படும்.
அக்கா நீங்க தான் எல்லாம்...கண்டிப்பா வந்து நடத்தி தரணும் அப்படினு நம்ம அம்பி(தம்பி) கேட்டு கொண்டதற்க்கிணங்க நானும், ரங்குவும் சனிக்கிழமையே சென்னை போயாச்சு..
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஒரு எழு மணிக்கு என்னோட அம்மா வீட்டிலிருந்து கிளம்பி மாப்பிள்ளை அழைப்புக்கு போயாச்சு..அங்கே எனக்கு முன்பாக தி.ரா.சா சாரும் அவரோட தங்கமணியும் இருந்தாங்க.. எல்லாரும் நம்மள அம்பியோட அன்னப்பூரணி அப்படினு சிறப்பா கவனிச்சாங்க...
நான் போனபோது அம்பி கோயிலுக்கு போயிருந்தார்..அம்பியோட தங்கமணி உடம்பெல்லாம் ஜரிகைப்போட்ட வைர ஊசி போட்ட மேரூம் கலர் புடவை, அம்பிவந்து ப்ளேசர் போட்டு இருந்தாரு.. எதோ மண்டபம் முழுக்க குளிர் சாதனவசதி ஊட்டப்பட்டிருந்தால் பொழச்சாரு.. இல்லாட்டி அவ்வளவு தான்.அவர் வந்தப்பிறகு அவரையும் அவரொட தங்கமணியும் பார்த்துட்டு போட்டோ எல்லாம் எடுத்துட்டு.. நம்ம வந்த முக்கியமான வேலைக்கு போயாச்சு( அது தாங்க சாப்பாடு).
தலை வாழை இலை போட்டு அதுல பால் பாயசம், பூந்தி தயிர் பச்சடி,இனிப்பு பச்சடி,பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பு கோசம்பரி,அத்திரிக்காய் கறி,வெள்ளை பூசனிக்காய் கூட்டு, பருப்பு வடை, போளி, ஊறுகாய், அப்பளம், சாம்பார்,ரசம், அப்பளம்,தயிர் என்று எல்லாவற்றையும் போட்டு வெகு விமர்சையாக இருந்தது சாப்பாடு..மூணு நேரமும் இப்படி தான் சாப்பாடு.. எப்பவுமே கல்யாணத்துல இந்த காபில தான் கலாட்டாவே அரம்பிக்கும். சாப்பாடு ஹால்ல தனியா ஒருத்தர் எப்பவும் காபிக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு எப்போழுது காபி கேட்டாலும் குடுக்க தயாராக இருந்தார்....அதுக்கு வழியே இல்லாம செஞ்சிட்டாங்க...அடுத்த நாள் கார்த்தால.. டிபன்.. இட்லி, தோசை, பொங்கல், வடை, அசோகா அல்வானு அமர்க்களப்பட்டுச்சி.. சீக்கிரமே முகூர்த்தம் அப்படிங்கர்தால பத்து மணிக்கு சாப்பாடு தொடங்கிட்டாஙக்.. நடுவுல பைனாப்பிள், திராட்சை, இஞ்சி-எலுமிச்சை ஜூஸு வேற..
நன்கு படித்த வேதவிற்ப்பன்னர்கள் மந்திரம் ஓத..
நாணத்தால் சிவந்ததோ இல்லை கட்டிய சிவப்பு சேலையினால் சிவந்ததோ என்றறியாத முகத்துடன் தந்தையின் மடியில் மணமகள் அமர்ந்திருக்க
பட்டு வேட்டியுடனும், நினைத்த பெண் தனக்கு மனைவியாக அமைந்த சந்தோஷத்துடன் மணமகனும்
தனக்கு இனி அனைத்து வேலைகளிலும் துணையிருக்க வந்துவிட்டாள் ஒரு பெண் என்று
மணமகனின் பெற்றொர்கள் அகமகிழ
இல்லை ஒரு பிள்ளை என்ற ஏக்கத்தை தணிக்க மாப்பிள்ளை ரூபத்தில் ஒருத்தர் வந்துவிட்டதை எண்ணி பெண்ணின் பெற்றொர் ஒருபுறம் அகமகிழ
சுற்றம், நண்பர்கள் எல்லாம் வாழ்த்தை மலர்களால் சொரிய
மங்கள வாத்தியம் முழங்க
இனிதே அம்பி எங்கிற ரஙகராமனே
ப்ரியா எங்கிற சீதாலட்சுமியின்
கழுத்தில் மூன்று முடியிட்டு
இனிதே திருமண வைபவம் முடிந்தது..மதியமும் நல்ல சாப்பாடு..
மாலையில் இருவரும் தங்கள் திருமணம் சுபமாக முடிந்த சந்தோஷத்தை கண்களிலும்,
இனி துடங்கவிருக்கும் வாழ்ககை இனிதே நடக்க வேண்டும் எங்கிற கனவுகளை நெஞ்சம் முழுவதும் சுமந்து கொண்டும் இருந்தனர்..
எல்லாவற்றிற்க்கும் மேலாக.. அம்பியின் தம்பிக்கு அவருடைய பாதையின் தடை கல் விலகியதில பெரும் மகிழ்ச்சி..
அம்பி அழகிய கிரீம் நிற ஷெர்வானியிலும்
அம்பியின் பாதி நல்ல அழகிய வேலைப்பாடுகள் செய்த ராஜரத்தின கல் நிறத்தில்(Sand Stone color) சேலையும் அணிதிருந்தனர்....
என்னுடன் தி.ரா.சா, வேதா, ஜி3, மற்றும் பொன்னரசி கோதண்டராமனும் நேரிலும்
அருண்,மு.கார்த்திகேயன்,பரணி ஆகியோர் தொலைபேசியிலும், மற்ற ப்ளாக் யுனியன் மக்கள் அனைவரும் தங்களின் மனதிலும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.