Sunday, December 16, 2007

மாதங்களில் நான் மார்கழி..



சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் போட்ட பதிவு... சில மாற்றங்களுடன்..

மார்கழி மாததிற்கு என்ன சிறப்பு??

தேவர்களுக்கு நம்முடைய ஒரு ஆண்டு ஒரு நாளை போன்றது..ஒரு மாதம் அவர்களுக்கு இரண்டு மணி நேரம். அப்படி அவர்களின் ஒரு நாளில் இந்த மாதம் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை. அவர்களின் பிரம்ம முகூர்தாமதலால் இது மிகவும் விசேஷமான மாதமாக கருதப்படுகின்றது..

கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்...



மார்கழி மாத்தில் மட்டுமே எல்லா மதத்தினருக்கும் பண்டிகை அமைந்துள்ளது

இந்துக்களுக்கு - வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்,ஹனுமத் ஜெயந்தி..

கிறுத்துவர்களுக்கு - கிறுஸ்துமஸ்

முஸ்லீம்களுக்கு - பக்ரீத்

அது மட்டுமல்ல!!

மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.. ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...




ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவல்லிப்புத்தூரின் கோவில் கோபுரம் தான் நமது தமிழ்நாட்டின் சின்னமாக வைக்க பட்டுள்ளது..

மேற்கூறிய காரணங்களால் தான் மார்கழி மாதம் சிற்ப்பானதாக உள்ளது.காலையில் சீக்கிரமாக எழுந்து எல்லாரும் பயன் பெறுவோமாக..