Thursday, May 21, 2009

498 (A) வரமா? சாபமா?

என்ன இது ஏதோ தமிழ் பட பெயர் மாதிரி இருக்கா?? நம்ம என்னிக்கி பட விமர்சனம் எல்லாம் எழுதி இருக்கோம்?? இது வரை தொனுத்தி ஆறு பதிவு எழுதியாச்சு ஒரு ரெண்டு பதிவ தவிர எல்லாமே படம் காட்டியாச்சு.. ஏதாவது உருப்பிடியா ஏதாவது எழுதலாம்னு தான் இந்த பதிவு.. இதன் மூலம் யாரையும் நோகடிக்கும் எண்ணம் எதுவும் இல்ல.. முன்னுரை போதும்னு நினைக்கிறன்.. விஷயத்துக்கு வரேன்...



அது என்ன 498(A)??? .. பெண்களை வரதக்ஷிணை கொடுமையில் இருந்தும் அவர்களை கொடுமைப்படுத்தும் ஆண்களிடம் இருந்தும் காப்பாற்றும் சட்டம்.. இந்த சட்டம் பெண்களுக்கு உண்மையிலேயே உதவ கூடியதாக இருந்தாலும் பல பெண்கள் இந்த சட்டத்தை தங்களுடைய சுயநலத்துக்காக பயன் படுத்தும் பொழுது ஆண்களுக்கு சாபமாக இருக்கிறது..

சென்ற வாரம் சனிக்கிழமை செய்தி தாளில் வந்த செய்தி... " இந்த சட்டத்தின் மூலம் ஒரு பெண் புகார் செய்தால் வாரண்ட் இல்லாமலும் எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் ஒரு ஆணை கைது செய்யலாம்.. மேலும் அந்த ஆண் நிரபராதி என்று நிரூபிக்க பட்டாலும் அந்த பெண்ணுக்கு தப்பான புகார் செய்ததற்காக எந்த தண்டனையும் கிடையாது".. என்ன கொடுமை சரவணன் இது!!!!.. வரமாக இருக்க வேண்டிய சட்டம் சாபமாக மாறியது யாருடைய குற்றம்.. இந்த சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் சில ஆண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.ஆண்களுக்கு உதவுவதற்கு சில இயக்கங்களும் ஏற்படுத்த பட்டுள்ளது.....



பெண்கள் புகார் செய்வதற்கு முன் யோசிப்பார்களா??

யோசிப்போமா???


பி.கு.:- இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதவில்லை.. என்னுடைய சொந்த கருத்துகளை மட்டுமே தெரிவித்துளேன்.. யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் மன்னிக்கவும்...

This number (3500895, Tuesdays and Fridays, 7 p.m. to 9 p.m.) is strictly for husbands and their close relatives who find themselves charged with offences under IPC 498A and the Dowry Prohibition Act in Bangalore