Thursday, August 27, 2009

கோத்துட்டாங்கயயா..கோத்துட்டாங்க... !!!!!

நம்மள கோர்த்து விட்டுட்டாரு கில்சு... தம்பி கோர்த்து விட்ட அப்புறம் போடாம இருக்கலாமா?? மரியாதையா ...
அதனால என்னோட தொடர் பதிவு..

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
இறைவனோட படைப்பு எல்லாமே அழகு தான்... அதனால அது நிரம்தரமானதே. என்ன ஒரொரு கால கட்டத்துல நமக்கு அதோட விவரிப்பு மாறலாம்.
சிறிய வயதில் நமக்கு நம் அப்பா அம்மா நமக்கு செய்வது அழகாக தெரியும்
அப்புறம் நமது நண்பர்கள் அழகா தெரிவாங்க
வயது வந்த பிறகு எதிர் பால் மக்கள் அழகாக தெரிவாங்க.
அப்புறம் நமக்கு பிறகும் குழந்தை ... இப்படி நமக்கு அந்த அந்த வயசில் அழகின் முகவரி மாறிக்கிட்டே இருக்கும்.

2. காதல் மனிதனுக்கு அவசியமா?
மிகவும் அவசியம்... காதல் இல்லாமல் நாம் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது...
நம்ம சுத்தி இருக்கறத நாம நம்மை அறியாமல் காதல் செஞ்சிக்கிட்டே தான் இருக்கோம்

3. கடவுள் உண்டா?
நிச்சயமாக என்ன எல்லாருக்கும் அம்மா இருக்காங்களே..
யாரோ சொல்லியது கடவுள் எல்லா இடத்துலயும் இருக்க முடியாதுங்கறதுனால தான் அம்மாவை படைச்சாராம். அதனால இதுல சந்தேகத்துக்கு இடமே இல்லை..

4. பணம் அவசியமா?
அவசியம் ஆனா எவ்வளவு அப்படிங்கறது அவங்க அவங்க மனச பொறுத்தது..
சிலருக்கு மாருதி கார் வாங்கற ஆசை இருக்கும் சிலருக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கற ஆசை இருக்கும்..

நான் கோத்து விடுவது...
கீதா மாமி
சுமதி அக்கா
அம்பி
கே ஆர் எஸ்
..

Biriyani - Method 2

Ingredients
400 gms. basmati rice
250 gms. cauliflower, cut into flowerettes
100 gms. green peas, shelled
100 gms. carrots, cut into 2.5 cm. long pieces
100 gms. french beans, cut into diamond shaped pieces
3 potatoes, cut into four pieces each
2 black cardamoms
4 green cardamoms
4 cm. cinnamon
4 cloves
8 peppercorns
1 tsp. shahjeera
3 bay leaves
Few strands saffron

Masala for the vegetables:
250 g. onions, sliced
3/4 cup curd
4 tsp. chilli powder
3 tsp. ginger-garlic paste
2 tsp. mint paste
1 1/2 tsp. garam masala powder
1 1/2 tsp. coriander-cummin powder
Salt to taste
3 tbsp. ghee or more
Ghee for deep frying onions
For the garnish:
2 tomatoes, sliced
2 capsicums, sliced
2 onions, fried till crisp
Few mint leaves

Method

To prepare the vegetables:

1. Wash the vegetables and dry them well.
2. Mix all the ingredients for the masala, well except the ghee, and marinate the vegetables in it for one hour.
3. Heat ghee and deep fry the onions till well browned. Remove from ghee.
4. When cool, grind to a paste.
5. Wash and cook the rice in double the quantity of water. When done, remove the rice and spread it in a plate.
6. Keep aside to cool.

To prepare the rice:
7. Lightly roast the saffron, powder and sprinkle over the rice.
8. Heat ghee in a kadai and season it with the whole spices.
9. Add the vegetables and saute for five minutes. 10. Add a little water and cook the vegetables till done and almost dry.
11. In a baking dish arrange alternate layers of rice and the prepared vegetables.
12. Top with garnish and bake in a moderately hot oven for 20 minutes.

Serve hot with raita and papad

Wednesday, August 19, 2009

நூறாவது பதிவு !!!!


விளையாட்டாக ஆரம்பித்த ப்ளாக் இப்பொழுது நாலாவது வருஷத்தில் என்னுடைய நூறாவது பதிவை பதிவு செய்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... !!!
நம்ப முடியாத வகையில் இத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து அதற்கு கம்மென்ட் போட்ட அனைத்து ப்ளாக் யூனியன் பெருமக்களுக்கு நன்றி...
வலை உலகத்துக்கு வந்து நிறைய நண்பர்கள்... என்னுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு என்னுடைய சோகங்களின் போது எனக்கு தோள் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் ஆயிரம்...
எத்தனை முறை அனைவரையும் கேலியும் கிண்டலும் செய்தாலும் அக்கா அக்கா என்று அனைவரும் என்னிடம் காட்டும் அன்பிற்கு அளவுகோலே இல்லை...
என்னை நேரில் சந்திக்க வேண்டி வந்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி...

நான் ப்ளாக் எழுத காரணமாக இருந்த எனது குரு திரு.டுபுக்கு அவர்களுக்கும் நன்றி...



எனது நூறாவது பதிவுக்கு வருகை தந்து இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த கேக்..

எனக்கு மெயிலில் வந்த மெசேஜ் !!! உங்களில் பலருக்கும் வந்திருக்கும்.. இருப்பினும் என்னை கவர்ந்ததால் இங்கு பதிவிடுகிறேன்...

One day Maths teacher asked her students to list the names of the other students in two sheets of paper, leaving a space between and asked them to write the nicest things about them against each name.When they finished their assignment she took it and the following saturday she wrote down the name of each student and listed what everyone else said about them.
On Monday she gave each student their list and the entire class was smiling and said 'I never knew that I meant anything to anyone! I never knew that others liked me so much'. was the comment from all the students.No one ever mentioned of those papers in class again.The exercise had accomplished its purpose. The students were happy with themselves and one another. That group of students moved on

Several years later, one of the students was killed in'Kargil' war and his teacher attended the funeral.The place was packed with his friends. One by one those who loved him took a last walk. The teacher was the last one to bless .
After the funeral, most of Sanjay's former classmates were there. Sanjay's mother and father were there, obviously waiting to speak with his teacher.'We want to show you something,' his father said, taking a wallet out of his pocket 'They found this on Sanjay when he was killed. We thought you might recognize it.'
Opening the billfold, he carefully removed two worn pieces of notebook paper that had obviously been taped, folded and refolded many times. The teacher knew without looking that the papers were the ones on which she had listed all the good things each of Sanjay's classmates had said about him.'Thank you so much for doing that,' Sanjay treasured it.'All of Sanjay's former classmates started to gather around and said that all of them have treasured it in some or other way. One of them said 'I think we all saved our lists'That's when the teacher finally sat down and cried. She cried for Sanjay and for all his friends who would never see him again.The density of people in society is so thick that we forget that life will end one day. And we don't know when that one day will be.So please, tell the people you love and care for, that they are special and important. Tell them, before it is too late.
Remember, you reap what you sow.. What you put into the lives of others comes back into your own.

HAVE A GLORIOUS DAY

நமக்கு அனைவருக்கும் நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கு என்று நாம் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாகி விட்டது.. நம்மில் எத்தனை பேர் நம் நண்பர்களிடம், அவர்களிடம் நமக்கு பிடித்த விஷயங்களை சொல்லி இருக்கிறோம்.. அவர்கள் நமக்கு செய்த உதவிகளுக்கோ, நமக்கு அழ கொடுத்த தோல்களுக்கோ, நம்முடன் பகிர்ந்து உண்ட உணவுகளுக்கோ, நம்முடன் செலவு செய்த அந்த தருங்களுக்கோ நன்றி தெரிவித்து இருக்கிறோம்.. இனிமேலாவது மாதத்தில் ஒரு முறையோ, முடியாமல் போனால் வருடத்தில் ஒரு முறையோ நண்பர்களுடன் அந்த வருடத்தில் அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் அதனால் நாம் அடைந்த சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்வோமே...

Tuesday, August 18, 2009

பிரியாணி

தேவையான பொருட்கள்:-
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
கெட்டி தயிர் - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
காய் கறி துண்டுகள் - இரண்டு கப்
(உருளை கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ் முதலியன)
எண்ணெய் - டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - ( நீள வாக்கில் அறியவும்)
உரித்த பூண்டு - ஆறு பல்லு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை பழம் -
புதின இல்லை - டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - டேபிள் ஸ்பூன்

அரைத்து கொள்ளவும்:-
முந்திரி பருப்பு - டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம்
இஞ்சி - அங்குல துண்டு
பச்சை மிளகாய் - ௮
பட்டை - ஒரு அங்குல துண்டு
இலவங்கம் - ௨
ஏலக்காய் - ௨
(மேலே சொன்ன பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஒரு கட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.)

செய்முறை :-
அரிசியை கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
தண்ணீரை வடித்து ஒரு வாணலியில் அரை டீஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பூண்டு வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
அதில் இஞ்சிபூண்டு விழுது, அறிந்த காய்கறிகள் சேர்த்து மிதமான அனலில் கிளறி விடவும்
அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போவும் வரை வதக்கவும்
தயிரை கடைந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் ஊற்றவும்
அது கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியுடன் உப்பும் சேர்த்து இட்டு மூடியை மூடி அனலை முழுதும் குறைத்து மேலே வெயிட் போடவும்
குறைந்த தணலில் பத்து நிமிடம் வேக வைத்து அனலிலிருந்து கிழே இறக்கவும்
மூடியை திறந்தவுடன் எலுமிச்சை சாறுவிட்டு அறிந்த புதினாத்தழையும், கொத்தமல்லித் தழையும் சேர்க்கவும்
நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

அடுத்த இதழில் பிரியாணி வேறொரு செய்முறை

Thursday, August 13, 2009

சாம்பார்

சாம்பார் செய்ய முதலில் சாம்பார் பொடி தேவை ... அது எப்படி தயார் செய்வதுன்னு மொதல்ல பார்க்கலாம்...


சாம்பார் பொடி செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்..







மி.வத்தல் - 500 கிராம்
கொத்தமல்லி விதை - 500 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
கடலை பருப்பு - 200 கிராம்
மிளகு - 50 கிராம்
கடுகு - 100 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
வரளி மஞ்சள் - 5 ரூபாய்க்கு (ஆறு முதல் ஏழு வரளி மஞ்சள் இருக்கும் ...)

மேற்கூறிய சாமான்களை நன்றாக வெயிலில் உலர்த்தி பிறகு மாவு மஷினில் குடுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்...
அப்படி அருகில் மிஷின் இல்லாதவர்கள் வானலியில் ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து மிக்சியில் பொடித்து சலித்து வைத்து. கொள்ளவும்...
அப்படி வறுக்கும் பொது கவனிக்க வேண்டியது:-
மிளகாயை நன்றாக வறுக்கவும்
கொத்தமல்லி விதை, வெந்தயம் இரண்டையும் கை பொறுக்கும் சூட்டிற்கு வறுத்தால் போதுமானது
பருப்பு வகைகளை சிவக்க வறுக்கவும்
மிளகு/கடுகை வெடிக்கும் வரை வறுக்கவும்.
மிக்சியில் பொடிப்பவர்கள் வரளி மஞ்சளை தவிர்த்து 25கிராம் மஞ்சள் தூளை சேர்த்து கலக்கவும்
இனி சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்...
(இது சுமார் ஆறு பேருக்கு)(serves 6)
துவரம் பருப்பு - 3/4 cup
காய்கறிகள் - 3 கப் ( சின்ன வெங்காயம், வெள்ளை பூசணிக்காய், முருங்கக்காய் முதலியன)
புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பவுடர் - 2 tablespoon
உப்பு - 1 to 2 teaspoon
சர்க்கரை - 1/2 teaspoon(தேவை பட்டால்)
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 1 tablespoon
கருவேப்பிலை - 1 tablespoon

தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 2 அல்லது 3
வெந்தயம் - சிறிதளவு
பெருங்காய பொடி - சிறிதளவு
எண்ணெய் - 1 teaspoon

செய்முறை
1) துவரம் பருப்பை ஒன்றரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக வைத்து கொள்ளவும். ஆரியவுடன் நன்றாக மசிக்கவும்
2) புளியை ஒரு கப் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து கரைக்கவும்
3) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் மற்ற காய்கறிகளையும் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அனைத்தையும் வேக விடவும்...
4) முக்கால் பாகம் வெந்த பின்னர் பச்சை மிளகாய், உப்பு, சாம்பார் பவுடர் மற்றும் புளி தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
5) பிறகு மசித்து வைத்து இருக்கும் பருப்பை விட்டு கருவேப்பிலை போடவும்.
6) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, வெந்தயம் தாளித்து, பெருங்காய பொடி போட்டு அதனை சாம்பாரின் மீது கொட்டவும்



கவனிக்க:-
1) சாம்பார் பொடி வறுத்து மிக்சியில் பொடிக்கும் பட்சத்தில் புளி தண்ணீர் பச்சை வாசானை போக கொதித்த பிறகு சேர்த்தால் போதுமானது.
2) நெய்யில் தாளிதம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் ( இது வெங்காயம் போட்டு செய்யும் சாம்பாருக்கு மட்டுமே பொருந்தும்.)..
3) இட்லிக்கு சாம்பார் செய்ய வேண்டுமெனில் சிறிதளவு பாசி பருப்பும் சேர்த்து வேகவைத்து கொள்ளலாம். பிறகு கடைசியில் சிறிது தனியா, வத்த மிளகாய், மூன்று அல்லது நான்கு சிறிய வெங்காயமும் சேர்த்து வதக்கி அதனுடன் சிறிது தேங்காய் சேர்த்து அரைத்து விட்டால் மிகவும் ருசியாக இருக்கும்...

ஜாடிகேத்த மூடி (இதன் சுவைக்கு சுவை கூட்டுபவை...):-
1) உருளைக்கிழங்கு/வாழைக்காய் கார கறி.
2) உருளைக்கிழங்கு/வாழைக்காய் பொடிமாஸ்
3) பீன்ஸ் கறி

Tuesday, August 11, 2009

காபி !!!!

சமையலில் முதலில் இன்று காபி போடுவது எப்படின்னு சுமதி அக்காவின் வேண்டுகோளுக்கிணங்க போடறேன்...




காபி பொடி:- நற நற என்றும் இருக்க கூடாது. அது போல மிகவும் மென்மையாகவும் இருக்க கூடாது..காப்பி பவுடரில் ஐந்து முதல் பதினைந்து சதவிகிதம் சிக்கரி இருத்தல் உசிதம்.



பால்: கொஞ்சம் திக்காக இருத்தல் நலம்

தேவையான பொருட்கள் :-
காபி பவுடர் :- ஒரு ஸ்பூன் ( ஒரு நபருக்கு)
பால்: அரை லிட்டர்
சர்க்கரை : தேவைக்கேற்ப.

செய்முறை..
1) முதலில் பில்டரில் மூன்று ஸ்பூன் காப்பி பவுடர் போட்டு நன்றாக பில்டர் குடையை கொண்டு அழுத்தவும்.
2) தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு பில்டரில் விட்டு திக்காக டிகாக்ஷன் இறக்கி கொள்ளவும்..
3) பாலில் தேவையான அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி கொள்ளவும்
4) பிறகு பாலில் டிகாக்ஷன் விட்டு சர்க்கரை போட்டு கலந்து குடிக்கவும்


கவனிக்க வேண்டியவை:-
1) டிகாக்ஷன் திக்காக இறக்கி கொள்ளவும்.. தண்ணியாக இருந்தால் காப்பி நன்றாக இருக்காது.
2)பால் காய்ச்சும் போதே தேவையான தண்ணீரை விட்டு கொள்ளவும்.. காய்ச்சிய பிறகு தண்ணீர் சேர்க்க கூடாது..
3)டிகாக்ஷனை எக்காரணம் கொண்டும் நேரடியாக சூடாக்க கூடாது. அப்படியே சூடாக்க வேண்டும் என்றால் அதனை கொதிக்கும் நீரில் இரு டம்ப்லரிலோ ஒரு பாத்திரத்திலோ விட்டு வைத்து சூடாக்கவும்.
4)பாலுடன் டிகாக்ஷனை சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்க கூடாது. இதனால் காபியின் சுவை கெட்டுவிடும்
5)டிகாக்ஷன் மீந்து போய் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பட்சத்தில் டிகாக்ஷனில் சிறிதளவு சர்க்கரை போட்டு வைக்கவும்.

சமீபத்தில் வந்த மடல்.. இன்றைக்கு போட்ட பதிவுக்கு பொருத்தமா இருக்குறதால இந்த படத்தையும் போடாச்சு...

ஆஸ்த்ரேலியாவில் 3604 காப்பி கோப்பைகளால் செய்த ஓவியம் இது.

அடுத்தாக அன்னம் அவர்கள் கேட்ட சாம்பார் !!!!

Monday, August 10, 2009

மொக்கை... !!!!

ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு அதனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது).. சரி சரி விஷயத்துக்கு வரேன்..

சமீபத்தில் கேட்ட மிகவும் பிடித்த பாடல்...நான் மிகவும் ரசிச்ச பாட்டு.. ஆனால் இது படமாக்கப்பட்ட விதம் ஏனோ பிடிக்கவில்லை...
ஹரிஹரன் மற்றும்சாதனா சர்கமும் சேர்ந்து பாடி இருக்காங்க. கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்..

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல்

காதல் ...தீண்டவே .... காதல் ...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
என்னாளும் ...
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

என்னை தொலைத்துவிட்டேன்
ஏன் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ தொலைந்தே நீந்தேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்...தீண்டவே
மூச்சின் குழிகளிலே ... உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
கூச்சம் வருகையிலே ...உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ
தாயுமானவனே
என் நெற்றி பாலையில் ஊற்றை திறந்து
காதல்...
காதல். ..தீண்டவே... காதல்...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் ...காதல் ...



**************************************

எல்லாருக்கும் ஒரு நற்செய்தி.. (எல்லாருக்குமானு தெரியல !!!)
கொஞ்சம் சமையல் பத்தி எழுதலாம்னு இருக்கேன்... உங்க
கருத்துகளை சொலுங்க.. எந்த மாதிரி குறிப்புகள் வேணும்னு சொலுங்களேன்..

(South Indian and North Indian only) No chinese please