Monday, April 30, 2007

மைசூர் அரண்மனை.. என் பார்வையில்!!!!



தெனிந்தியா என்றாலே அனைவருக்கும் அழகான கோயில்கள், அரண்மனைகள் இப்படி தான் நினைவுக்கு வரும்..
கர்நாடகாவும் அதற்கு விதிவிலக்கில்லை எனலாம். பெங்களூர் எனறவுடன் நினைவுக்கு வருவது சனிக்கிழமை இரவும அருகில் உள்ள மைசூரும் தான்.
மைசூர் என்றவுடன் அங்கு அரண்மனையும், கிருஷ்ணராஜ சாகர் அணையும், சாமுண்டி ஹில்ஸும்,ஸ்ரீரங்கப்பட்டினம் இப்படி பல இடங்கள் உள்ளன.

அட என்னடா இது பில்டப்பு எல்லாம் பலமா இருக்கேனு பார்க்கறீங்களா?? வேற ஒண்ணும் இல்லை சமீபத்துல மைசூர் போயிருந்தேன்.. அது தான். அங்கே மைசூர் மஹாராஜாவின் அரண்மனைக்கும் சென்றிருந்தேன்..
எவ்வளவு அழகான அரணமனை, எத்தனை அழகான வேலைப்பாடுகள், எத்தனை அழகான ஓவியங்கள், இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ...

இது எல்லாம் எல்லாரும் சொல்றதுதான்.. ஆனா நம்ம கொஞ்சம் வேற மாதிரி சொல்ல வேண்டாமா?? அதுனால தான் இப்படி ஒரு பில்டப்பு...


சரி இப்பொழுது கதைக்கு போகலாம். 1399ல் யதுராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வோடையார் சாம்ராஜ்யம்.. அவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தனர். யதுராஜாவும் அவருடைய சந்ததிகளும் இருனூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். அவர்கள் அவர்களுடைய அளுகைக்குள்ப்பட்ட ராஜியத்தையும் விரிவுப்படுத்தி வந்தனர்..

அவ்வாறு அந்த வம்சத்தின் ஒன்பதவாது தலைமுறையில் வந்தவர் தான் ராஜ வோடையார்..(1578-1617)அவர் மிகுந்த வீரமுடையவராகவும், கலை,கலாச்சாரம் அகியவற்றை போற்றுபவராகவும் இருந்தார். அவருடைய தலைமையின் கீழ் அவர்களுடைய எல்லைகள் விரிவாக்கப்பட்டன.



அப்பொழுது அவர் ஒரு முறை ஸ்ரீரங்கப்பட்டினத்தை நோக்கி படையெடுத்து அப்பொழுது இருந்தவரான ஸ்ரீரங்கராயா என்பவரிடம் இருந்து கைபற்றினார்.ஸ்ரீரங்கராயர் அவருடைய இரு மனைவிகள். அதில் ஒருவர் தான் அலமேலம்மா. அவர் ஸ்ரீரங்கநாதரின் மனைவியான ரங்கனாயகியிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தார். ஒவ்வோரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அவருடைய முத்தாலான ஒரு மூக்குத்தியும் மற்றும் அவருடைய அனைத்து நகைகளும் தாயார் ரங்கனாயகியின் மேனியை அலங்கரிக்கும்.

மற்ற நாட்களில் அவைஅனைத்தும் அலமேலம்மவிடமே இருக்கும். இதனை கண்ட ராஜவுடையார் தன்னுடைய படைகளை அலமேல்லம்மா தங்கி இருந்த மாலங்கி என்ற இடத்துக்கு அனுப்பி அந்த நகைகளை அவரிடமே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அலமேலம்மா அதனை செய்ய மறுத்து நகைகளுடன் ஒடினார். படை அவரை துரத்திக்கொண்டு ஓடியது..

ஒடிய அலமேலம்மா என்ன ஆனார்? இதனால் ராஜவுடையார் சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன??நானூறு வருடங்களாக இந்த ராஜ பரம்பரை சந்தித்து வரும் சாபம் என்ன?? அடுத்த பதிவில் ....

Friday, April 27, 2007

நயன்தாரா,திரிஷா, பாவனா, அசின்!!!!!!!!

அடுத்த காபி வித் கோப்ஸ் நான் தான்.. இந்த வார இறுதியில் எதிர்ப்பாருங்கள்
நம்ம கோப்ஸும் , k4kyum ரெம்ப கேட்டாங்க.. அக்கா நயன்தாரா, த்ரிஷா போட்டோ போடுங்கனு.. அதுனால போட்டாச்சு!!!
பில்லு பரணிக்காக பாவனாவும், தலைவர் மு.காவுக்காக அசினும் சேர்க்கப்பட்டுள்ளனர்...


















சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை ரெண்டு நாளும் இவங்களப்பார்த்து சந்தோஷப்பட்டுக்கோங்க.....

Wednesday, April 25, 2007

சமீக்க்ஷா!!! உங்கள் பார்வைக்கு...

டிஸ்கி:- இவங்களுக்கு வேற பேர் இருக்கா, ஏதாவது படத்துல நடிச்சி இருக்காங்களா எல்லாம் தெரியாது..


நீ ஏன் ஆச்சர்யப்படுகிறாய்
உன்னை கண்ட பின்பு
செடிகளல்லவா ஆச்சர்யபடுகின்றன
ஒரு பூ அவர்களை பார்க்கவந்ததைக்கண்டு!!!

நதி புனிதமானது
என்ற போது சிரித்தேன்.
இப்பொழுதல்லவா தெரிகின்றது
எப்படி புனிதமானது என்று!!!

மீன் தொட்டியின் அருகில்நெடுநேரம்
நிற்காதே...மீன்கள் அனைத்தும்
நீரில்லாமல் எப்படி ஒரு மீன் தரையில்
இருக்கின்றது என்று ஆச்சர்யபடுகின்றன

Monday, April 23, 2007

Office Toons (Funny)

இதுல அவங்க அவங்க ஆபீஸ் எப்படி இருக்குனு நீங்களே தெரிஞ்சுக்கோங்க










நம்ம சச்சின் கோப்ஸ் தமிழ் பாட்டு பாடினால்...


நம்ம சச்சின் கோப்ஸ் தமிழ் பாட்டு பாடினால் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை!!!
(கோப்ஸ்.. டென்சன் ஆகாதே..)கோப்ஸ் எப்பவும் தங்லீஷ்ல தான் டைப் பண்ணுவாரு.. அந்த மாதிரியான முயற்சி தான் இதுவும்
முதல் மரியாதைல வர ஒரு பாட்டை அவரு பாடறாரு...
பாட்டு :- ராசாவே உன்னை நம்பி!!!
ஸ்டார்ட் மீசிக்....



ராசாவே youva நம்பி
இந்த rosefloweru இருக்குதுங்க..
ஒரு wordu சொல்லிடீங்க
அது lifea வந்து உருக்குதுங்க...
வந்து toldaatha உறவ
இவ heartodu வளர்த்தா
அது wrongana கருத்தா
waterin எழுத்தா??? (ராசாவே)



Olda மறக்கலியே sinnu மக துடிக்குது..
youவையும் Iயையும் வச்சி cityசனம் கும்மி அடிக்குது.
அடடா Iக்காக அருமை குறஞ்சீக..
தரும sonராசா heada கவுந்தீக.
கலக்கம் commes என்ன seeyu
அதுக்கும் moonnu தான் nameu
அட மந்தையில standaலும் நீ வீரப்பாண்டி chariot (ராசாவே)



ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதி இருக்கேன்...

போட்டு இருக்கிற படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் அப்படினு எல்லாம் கேட்க கூடாது...
நம்க்கு தான் டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்க இல்ல படம் போடறதுல. அப்போ படம் போடலேனா எப்படி.. வந்ததுக்கு நல்லதா எத்தனை கமேண்டு முடியுதோ போட்டுட்டு போங்க...

Thursday, April 19, 2007

உருப்படியாக ஏதாவது செய்யலாமா - தொடர்ச்சி!!!

ஏற்கனவே இதை பத்தி எழுதி அதுக்கு உங்க எல்லார்க்கிட்டேர்ந்தும் நல்ல ஆதரவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...

இதன் மூலம் மேலும் நல்ல பல முயற்ச்சிகளை மேற்க்கொள்ளவத்ற்காக தான் இந்த பதிவு..
உங்க எல்லாருடைய பெயர் முகவரி எல்லாம் எடுத்து வச்சிட்டு என்ன பண்றாங்கன்னு நீங்க யோசிப்பீங்க.. ஏதோ ஒரு யாஹூல க்ரூப் பண்றதுக்கு தானானு நீங்க யோசிக்க கூடாது இல்லையா..அதுதான்..
சரி இப்போ விஷயத்துக்கு வர்ரேன்.

1) நான் ஒரு ப்ளாக் புதுசா ஆரம்பிச்சு இருக்கேன். அதோட லிங்கும் எல்லாரும் எழுதத்றத்துக்கான பெர்மிஷனும் இந்த வார இறுதிக்குள் உங்களுக்கு அனுப்பபடும்.
2)இந்த ப்ளாக்ல என்னவெல்லாம் எழுதலாம்னு ஒரு லிஸ்ட் குடுக்கறேன்.
அ) வேலை வாய்ப்பு செய்திகள் - முழு விவரங்களுடன்
ஆ) நீங்கள் வலை உலகத்தில் மேயும் போது உங்கள் கருத்தை கவரும் செய்திகள், நோய் தடுப்பு முறைகள், வருமுன் காப்போம் செய்திகள்.(இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். யாருடைய மனதையும் புண்படுத்தும் செய்திகள்/அரசியல் தவிர்க்கவும்) உங்களுக்கு யாரேனும் பார்வேட் செய்த்தாகவும் இருக்கலாம.பதிவாக இட முடியாதவர்கள் லிங்க் குடுக்கலாம்.
3) யாராவது வெளி நாட்டிலிருந்து வரும் போது ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதையும் ஒரு பதிவின் மூலம் தெரியப்படுத்தலாம்.(அவர்களின் சொந்த ஊரை தவிர்த்து மற்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்ல தேவைப்பட்டால்)
4) இங்கிருந்து யாராவது வெளிநாடு செல்வதானால் விசா சம்பந்தமாக கேள்விகளோ/விசா வாங்க விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் என பகிர்ந்து கொள்ளலாம்.
5) ஏதாவது பண்டிகை வந்தால் அதை பற்றியும் பதிவு இடலாம்.
6) உங்களுக்கு நன்கு தெரிந்த யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதையும் போடலாம். (எழைகளுக்கு பண உதவி, படிப்பிற்க்கு உதவி, மருத்துவ உதவி போன்றவை.)
7) உங்களுக்கு யாருக்காவது ஏதாவது மருத்துவர் பதிவு இடுபவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நம்ம ப்ளாக்ல அவரையும் சேர்க்கலாம். ( ஏதாவது உதவி தேவைப்பட்டால் நாம் தொடர்புக்கொள்ள வசதியாக இருக்கும்.)
8) நம்முடைய குழுவில் இருப்பவர்களின் பிறந்த நாள், கல்யாண நாள் அகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.
9) நம் குழுவினரின் இல்லங்களில் நடக்கும் கல்யாணம்/பிறந்த நாள்/இன்ன பிற விழா ஆகியவற்றுக்கான அழைப்பிதழ்களை போடலாம்.
10)வருடத்தில் ஒருமுறையோ இருமுறையோ ப்ளாக்கரின் சந்திப்பு வைக்கலாம். (சென்னை அல்லது பெங்களூரில் எங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் இருக்கிறார்களோ)
11) எல்லாருடைய ப்ளட் கரூப்பும் அனுப்பிவைக்கவும்

நான் போன பதிவிட்டு சேகரித்த அனைத்து தகவல்கள் அனைவருடனும் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இவை என்னுடைய பார்வையில் மட்டுமே.. யாருக்காவது வேறு ஏதாவது சிந்தனை தோன்றினால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இது எல்லாம் செய்ய எதுக்கு இனோரு ப்ளாக்னு நீங்க எல்லாம் யோசிக்கலாம். எல்லா விஷயமும் ஒரே ப்ளாக்ல இருந்தா அந்த ஒரு ப்ளாகை மாத்திரம் பார்த்தால் போதுமே என்பதற்காக தானுங்கோ.

முக்கியமாக யாரும் முதல் கமேண்ட் போட்டதுக்காக புளியோதரை/சிக்கன்/மற்றவை எல்லாம் கேட்க கூடாது..

உங்கள் அனைவரின் ஆதரவு இதற்க்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதியதாக துவங்கப்பட்ட ப்ளாகின் பெயர் மற்றும் யூ.ஆர்.எல்.
பெயர் :- blog union
யூ.ஆர்.எல் :- http://blog-union-2007.blogspot.com/


பி.கு.:- முதல் முறையாக படங்கள் இல்லாத பதிவு...

Tuesday, April 17, 2007

மீரா சோப்ராவின் அரிய புகைப்படங்கள்...







இந்த முறை யாருக்கும் பல்ப் குடுக்கலைனு நினைக்கிறேன்

சில மெட்ரிமோனியல் விளம்பரங்கள்

அடுத்த பதிவு "மீரா சோப்ராவின் அரிய புகைப்படங்கள்!!!"உங்களுடைய ப்ரவுஸர்களில்


இது ஆங்கில பதிவு.. மன்னிக்கவும்..
என்னுடைய கமேண்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன..


These are actual ads on a matrimony site. Grammar and spell errors have
no place in a profile description as everything is straight from the
heart!

Disclaimer :I am not responsible if you forget your basic
grammar after reading this mail... It's a bit long but hilarious


#1. - Hello To Viewvers My Name is Somesha, I am single i dont have Famale, If any one whant to marrie to me u can visite to my home. I am not a good education but i working all field in bangalroe.. if u like me u welcome to my heart... when ever u whant to meet pls viset my resident or send u letter.. Thanks
--- yours Regards Somesha
(எல்லா துறையிலும் வேலை செய்யரார்ராம்.. ஆல் இன் ஆல் அழகுராஜா தான்..)

#2. I want very simple girl. from brahmin educated family from orissa state he is also know about RAMAYAN, GEETA BHAGABATA, and other homework
(Homework?)
(ஹோம்வர்க் எல்லாம் தெரியனுமாம்.. மொதல்ல நீ போய் பகவத்கீதைக்கு சரியான ஸ்பெல்லிங் படிடா...)


#3. Wants a woman who knows me better and can adjust with me forever. She may never create any difficulties in my life or her life by which the entire life can run smoothly. thank you
(The principle of running life smoothly was never so easy!)
(அடடா!!! சீக்கிரம் கிடைச்சிடும் நீங்க கேட்கற மாதிரி)

#4.She should be good looking and should have a service. She Shoulsd have one brother and one sister. She should be educated.
(ain't it unique !! 1 brother 1 sister criteria !)
(சர்வீசா?? என்ன சர்வீஸ்?? பஸ்ஸா?? காரா??)


#5. I am simple boy.I have lot of problemin my life because ofmyl ucknow i amlooking onegirlshe caremeandloveme lot lot lot
(நீ ஆங்கிலத்தை ஒழுங்கா எழுதினாலே உன்னோட பாதி ப்ராப்ளம் போயிடும்..)

#6. My wife should be as 'Parwati' as in Kahani Ghar Ghar Ki and as Tulsi as in KSBKBT......
(Ok I haven't seen these soaps but I am sure he must be demanding too much, ain't he?)
(இதுக்கு தான் நிறைய சீரியல் எல்லாம் பார்க்ககூடாதுனு சொல்றது...)

#7. HYE I AM A GOOD LOKING GUY, WHO HAS THE CAPABILITY TO MAKE ANY BODY TOLOUGH.I BELIEVE IN GOD AND ACCORDING TO ME FRIENDS ARE THE REAL MESSENGER OF GOD. THE 3 THINGS I AM LOOKING FROM A GIRL ,THEY ARE 1.THEY MUST BELIEVE IN GOD. 2. THEY HAVE TO LIKE MY PROFFESION AND THEY SHOULD NOT GET BORED WITH ME WHEN I WILL TRY TO MAKE THEM LOUGH.
(all of us are loughing)
(என்னடா இது .. பேசாம ஒரு நன்னா பார்த்து கல்யாணம் பண்ணீக்கோ..)

#8. Whatever she may be but she should feel that she is going to be someone bride and she must think of the future life if she is toolike this she would bde called the lady of the lamp.

(I am clueless, I feel so lost. Can anyone tell me what this guy wants)

Sunday, April 15, 2007

தெரிந்த விஷயங்கள் தெரியாத விளக்கங்கள் -இரண்டாவது பாகம் !!!

நம்ம போட்ட தெரிந்த விஷயங்கள் தெரியாத விளக்கங்கள் படிச்சுட்டு கார்த்திகேயன் நம்மக்கிட்ட இன்னும் முணு கேள்வி கேட்டுட்டாரு.. அதுக்கு விளக்கம் கொடுக்கலேனா எப்படி.. அது தான் இந்த பதிவு

மேலும் சிலர் கொடுத்த விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது...



1)ஏன் வாழைமரம் கல்யாண மற்றும் இறந்தவங்க வீட்ல கட்றாங்க (கட்லைனா விழுந்திடும்னெல்லாம் செல்லக்கூடாது)?

Ans) வாழை மரம் ஏன் கல்யாணத்துல கட்டறாங்கனு கேட்டு இருக்காரு.. வாழை மரத்துல மட்டும் தான் எல்லா பாகமும் உபயோகப்படுது.. (இலை,பூ,காய்,பழம்,தண்டு,நார்) இப்படி எல்லாம் உபயோகப்படுது.. அது மட்டும் இல்லாமல் வாழை மரத்தில் விடை இல்லை அதுவே அடுத்த வாழைக்கன்று இட்டுவிடும்.. இது போல நாமும் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கவேண்டும் ... அது மட்டும் இன்றி வாழை போல நாமும் நல்ல பல சந்ததிக்ளோட வாழனும் அதுக்கு தான் வாழை மரம் கட்டறோம்.

கார்த்திகேயன் குடுத்த விளக்கம்:- வாழைமரங்களுக்கு, விஷத்தை ஈர்க்கும் சக்தியுள்ளது என்று எல்லோருக்கு தெரிந்திருக்கும்.

பாம்பு கடித்தவரை அதில்தான் படுக்க வைப்பார்கள், அந்த விஷம் இறங்குவதற்க.

இந்த காரணத்திற்காக தான் கல்யாண வீடுகளிலும், இறந்தவர்கள் வீடுகளிலும் வாழமரம் கட்டுகிறார்கள்..

கல்யாண வீட்டிற்கு வருபவர்கள், ஒரு நல்ல காரியதிற்காக வருபவர்களுக்கு, அங்கு வருவதால் எந்த நோய்களும் (வெளியிலிருந்து)வராமலிருக்க வாழைமரம் கட்டுகிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டில், இறந்தவர் உடம்பிலிருந்து எந்த வித கிருமிகள் வெளியில் செல்லக்கூடாதுன்னு வாழை மரம் கட்றாங்க..




2) தாலி கட்டும் நேரத்தில் கெட்டிமேளம் உரக்க அடிப்பது எதற்காக?
Ans) தாலி கட்டும் போது யாராவது நமக்கு வேண்டியவங்க வேண்டாதவங்க ஏதாவது பொறாமையில் ஏதாவது சொன்னாலோ அல்லது வேறு ஏதாவது அபசகுனமாக பேசினாலோ அது எல்லாம் நம் காதுகளுக்கு கேட்க கூடாது அப்படிங்கற்த்துக்குதான் தாலி கட்டும் போது மேளம் உரக்க அடிக்கறாங்க..



3) பெண்கள் கட்டைவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி போடுவதற்கு எதற்காக?
Ans) நம்முடைய ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு அக்குப்ரஷர் பாயிண்ட் இருக்கு. அந்த பாயின்ட அமுக்கும் போது அதுக்கு தொடர்புடைய பாகத்தில்லுள்ள வலியோ இல்லாவிட்டால் வியாதியோ குணம் அடைகிறது. அதுப்போல தான் பெண்களின் கர்ப்பப்பைக்கு அக்குப்ரஷர் பாயிண்ட் கால் கட்டைவிரலுக்கு அடுத்த விரல்.. அதனால தான் அதுல மெட்டி போடராங்க...

சுமதி கொடுத்த விளக்கம்:-இந்த கால்ல ஏன் வெள்ளி தான் போடனும்னா,அக்குபிரஷர் புள்ளிகள் இருக்கற ஜாயிண்ட்ஸுக்கு வெள்ளி தான் நல்லது னு சொல்லுவாங்க.

டிஸ்கி:- இவை எனக்கு தெரிந்த விளக்கமே. வேறு யாருக்காவது புதிய விளக்கங்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

Friday, April 13, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

Send this free eCard


ப்ளோக் உலக நண்பர்கள்/நண்பிகள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
மற்றும் புத்தாண்டை கொண்டாடும் மலையாள மற்றும் பெங்காலி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, April 12, 2007

நம்மளோட அழகு ஆறு..!!!!

நம்மள மதிச்சி கார்த்திகேயன். டேக் பண்ணி அழகுகள் ஆறு எழுதங்கனு சொல்லிட்டாரு....அப்புறம் எழுதலேனா எப்படி.. (நாம் தான் ப்ளாக்கு தலைப்பே கிடைக்காம் இருக்கோமே).நாமளே அழகு தான்... நம்ம போட்டோவ ஆறு தரம் போட்டாலே என்னனு யோசிச்சேன். ஆனா கண் பட்டுட்டா அப்புறம் என்ன பண்றதுனு யோசிச்சு தான் விட்டுட்டேன்.. (ஹி ஹி).
கார்த்திகேயன் சார் உங்களோட கேள்விகளுக்கான் பதில்கள் கூடிய விரைவில் எழுதறேன்.



1) குழந்தை :- குழந்தைகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். தனி அழகு.அவங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.. எதையும் எளிதில் மறக்கும் தன்மை. அவங்கள யார் திட்டினாலும் உடனே அதை மறப்பது..மழலை மொழி..இப்படி நிறைய.... நாமளும் குழந்தையாவே இருந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும் அப்படினு நான் நிறைய தடவை யோசிச்சு இருக்கேன்.

2) கண்ணன்:- கண்ணன் என்றாலே அழகு தான்.. அதிலும் நீல நிற அழகன். குறிப்பா மேல இருக்கிற படத்துல இருக்கிற யசோதை கண்ணனை ரொம்ப பிடிக்கும். கண்ணன் அப்படினாலே குறும்பு தான்.. ஆனா இந்த கண்ணன் சாதுவா அம்மாவிடம் அடைக்கல்ம் பகுந்து இருப்பது ரொம்பவே அழகு..

3)அருவி:- மேலேர்ந்து கீழே விழும் அருவியை ரொம்பவே பிடிக்கும்.என்ன ஒரு கம்பீரம். நயாகரா நீர்விழிச்சியை ரொம்ப பிடிக்கும்.. பார்த்ததில்லை எனினும் கேள்வி பட்டதுண்டு நிறைய.. பார்க்கவேண்டும் என்பது வாழ்நாளின் கனவு..
வைரமுத்து தன்னுடைய கவிதையில் இதை பற்றி சொல்லும்பொது (நயாகரா நீர்விழுச்சி)
இங்கு தற்கொலை செய்து கொண்டால்
மரணம் கூட மரியாதைக்குரியது!!

4)பூக்கள்: பூக்களின் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. பச்சை இலைகளின் நடுவில் அழககான நிறங்களில் காலையில் மலர்ந்து இருக்கும் பூக்களை பார்க்கும் போது ஒரு வித புத்துணர்ச்சி என்னுள்.


5)கேரளா:- கடவுளின் சொந்த இடமான கேரளா மிகவும் அழகு.. அழகான குளங்கள், சுற்றிலும் தென்னை மரங்கள், வாழை மரங்கள், அழகான வீடுகள்,வீடுகள் அனைத்திலும் அழகான பூக்கள் என்று இயற்கையே கொஞ்சி விளையாடும்.. (அங்குள்ள பெண்களும் தான்னு நிறைய பேர் சொல்லரது புரியுது)

6) வானம்:- இரவில் ஆகட்டும், பகலிலாகட்டும் மிக அழகாக தெரியும். அதன் நீல நிறம், மேகங்கள் ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தை நினைவூட்டும். இரவில் தோன்றும் நிலா, நட்சத்திரங்கள். அழகான கருப்பு நிற வானில் வெள்ளை நட்சத்திரங்கள்.. அதுவும் சமீப காலமாக சுக்கிரன் நட்சத்திரமும், செவ்வாய் (சிகப்பு நிறம்) நட்சத்திரமும் தெரிகிறது. அவற்றின் அழகை காண கோடி கண்கள் வேண்டும்.

அப்பா ஒரு வழியா நாம எழுதியாச்சு.. சரி இனிமே நாம யாரைவது டேக் பண்ண வேண்டாமா??

1) கிரைம் நாவல் புகழ் சுமதி.
2) காபி வித் கோப்ஸ் கோப்ஸ்.
3) பூவாகவே ராஜி
4) H1B விசா புகழ் அருண்
5) அம்பிக்கு கல்யாணம் அமைய காரணமான தி.ரா.சா.