Thursday, December 21, 2006

அன்பே!! உனக்காக எதுவும்!!!!



அன்பு விற்க படுகின்றது என்றால்
யார் தான் அதை வாஙகமாட்டார்கள்!!
நல்ல விலை கிடைக்கும் என்றாலும் யார் தான் சந்தோஷத்தை விற்பார்கள்!!
கண்ணே!!!
வலிக்கான மருந்து உண்டு என்றால்
நான் உன்னிடம் இருந்து வாங்கி கொள்வேன்!!!
அன்பே!!!
உனக்கு சந்தோஷம் கிடைக்கின்றது என்றால் நான் என்னயே விலையாய் கொடுப்பேன்!!!

Me going on vacation till 27th.. So will post replies for your comments only after that .. Please bear with me.... Happy holidays and happy Xmas to all of you!!!!

Tuesday, December 19, 2006

எல்லா ஜொள்ளர்களின் பார்வைக்காக முதன்முறையாக ப்ளாகில்!!!




திரு.ஜொள்ளுப்பாண்டி, திரு.வெட்டிபயல், திரு.சயாம் போன்ற எண்ணற்ற அண்ணாச்சிகளுக்காக...
இஞ்சி இடுப்பு மாத்திரம் தான் அழகா??
இந்த இடுப்பு கூட தானுங்க அழகு!!!!

யாரும் கோச்சிக்காதீங்க....
யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை

ஹி ஹி ஹி

Sunday, December 17, 2006

மார்கழி மாதம் ஏன் சிறப்பானது??


மார்கழி மாததிற்கு என்ன சிறப்பு??

கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்...

மார்கழி மாத்தில் மட்டுமே எல்லா மதத்தினருக்கும் பண்டிகை அமைந்துள்ளது

இந்துக்களுக்கு - வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்

கிறுத்துவர்களுக்கு - கிறுஸ்துமஸ்

முஸ்லீம்களுக்கு - பக்ரீத்

அது மட்டுமல்ல!!
மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.. ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...
மேற்கூறிய காரணங்களால் தான் மார்கழி மாதம் சிற்ப்பானதாக உள்ளது

Friday, December 15, 2006

கவிதை !! கவிஜ !! கதை!! கருத்து!!



ஹலோ !!!
யார் யாருக்கு இந்த படத்தை பார்த்து என்ன தோணுதோ எழுதுங்க சீக்கிரம்...

ஓரு ரோஜா பூ
மற்ற பூக்களுடன்
பேசிக் கொண்டு இருக்கின்றதே!!

நானும் நீயும் பிறக்கும் போது
மென்மையானவர்கள் தான்..

நாள் செல்ல செல்ல நீ வாடி விடுகின்றாய் - தட்ப வெப்பதினால்

நானோ வாட்ட படுகின்றேன் - என்
சக மனிதர்களால்...

எல்லாரும் சீக்கிரமா போடுங்க உங்க கருத்துகளை!!

Tuesday, December 12, 2006

இந்து மதத்தின் டார்வின் தியரி!!!

எல்லா மதமும் எதாவது ஒரு வகையில் மனிதனை அச்சர்யபட வைக்கும் .. அது போல இந்து மதத்தில் உள்ள எத்தனையோ விஷயங்கள் என்னை அச்சர்ய பட வைத்துள்ளது.. அவற்றில் ஒன்றை தான் நான் உங்களோடு இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன்..மேலை நாட்டவர்கள் டார்வின் தியரி அவர்களுக்கே சொந்தமானதாக நினைக்கிறார்கள்.ஆனால் இந்து மதத்தில் அது பல காலம் முன்பாகவே சொல்ல பட்டுள்ளது. நம்மில் பல பேருக்கு அது தெரியாது.. எங்கே எப்படி சொல்ல பட்டுள்ளது ... ???இதோ விளக்கம்........படித்து பயன் பெறவும்.இந்து மதத்தின்படி விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து.
1)முதல் அவதாரம் - மீனாவதாரம்..இது நீரில் மட்டும் வாழும் தன்மை கொண்டது..

2)இரண்டாவது அவதாரம் - ஆமை அவதாரம்.. இது நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழும் தன்மை கொண்டது..

3)மூன்றாவது அவதாரம் பன்றி அவதாரம் - இது நிலத்தில் வாழும் உயிரினம் ..ஆனால் இது ஆமையின் அடுத்த பரிணாம வளர்ச்சியுடையது...

4)நான்காவது அவதாரம் நரசிம்மர் - இது மனிதன் பாதி மிருகம் பாதி.

5)ஐந்தாவது அவதாரம் - வாமன அவதாரம் - இது மனிதனின் முதல் பரிணாமம்.

6)ஆறாவது அவதாரம் - பரசுராமர் - இந்த அவதாரம் கையில் கோடாலியுடன் - இது தான் மனிதன் முதலில் உபயோகம் செய்த அயுதம்.

7) எழாவது அவதாரம் - ராமாவதாரம் ... இந்த அவதாரம் வில்லுடன் கூடியது .. வில் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகும்

8 & 9) எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரம் - பலராமர் மற்றும் கிருஷ்ணர்- இவர்கள் இருவரும் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியை வெளிபடுத்தினர் -- அது இவர்களுடைய போர் திறனில் வெளிப்பட்டது.

10) பத்தாவது அவதாரம் (எடுக்க போவது) கல்கி - இந்த அவதாரம் குதிரை மீது இருப்பதாகும்.. இந்த யுகத்தின் முடிவில் பெட்ரோலின் தட்டுபாடு வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றது. அதானால் தான் கல்கி அவதாரம் குதிரை மீது...

ஆகையால் டார்வினின் பரிணாம வளர்ச்சி தியரி நம்முடைய இந்து மதத்தில் ஏற்கனவே சொல்ல பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று

தங்கள் கருத்துகளை பின்னுட்டத்தின் மூலம் தெரிவிக்கவும்

Monday, December 11, 2006

அம்பி அவர்களுக்கு சமர்ப்பணம்!!!


ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கி தான் ப்ளாக் போடறேன்.. இந்த ப்ளாக் போடுவதற்கு எனக்கு உதவிய அம்பி அவர்களுக்கு மிக்க நன்றி.ஏனக்கு தமிழில் எழுதுவது கஷ்டமாக இருந்தது .. தமிழில் எழுதுவதை எளிதாக்கி தநத எல்லார்க்கும் நன்றி..

அகர முதல எழுத்தெல்லாம் அரிய வைத்தாய் அம்பி...(அம்பி சார் நீங்க சொன்ன மாதிரியே எழுதியாச்சுஙோ!! சீக்கிரம் பாராட்டு மடல் அனுப்பவும்)

உங்களை விரைவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் டுபுக்கு டிசைபிள்